Sunday, September 1, 2013

தமிழக முதல்வராய் இலங்கை தமிழருக்காக 1971,1989 மற்றும் 2006-2011 கலைஞர் ஆற்றிய பணி.

 1974  :கச்சத் தீவை இந்திய மற்றும் இலங்கை  அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட  ஒப்பந்தத்தின் படி இலங்கையிடம்  ஒப்படைக்கப் பட்டது. இந்திய மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்கும்  உரிமையை இழந்தனர்.  532 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்ற காரணத்தால் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர். பல தடவை மீனவர்கள் சிறை பிடிக்கப் பட்டு சிறையில் வாடி பின்  விடுவிக்கப் பட்டுள்ளனர்.

1987-1990  இந்திய அமைதிப் படை இலங்கை சென்று அமைதியை நிலை .நாட்டைச் சென்றது. ஆனால் அதுவே  பின் புலிகளுக்கும் அமைதிப் படையினருக்கும் இடையே  ஆனா சண்டையை  மாறியது..இந்திய ராணுவம்  80,000 ராணுவ வீரர்கள் வரை இலங்கைக்கு அனுப்பி பல  போராளிகளையும்  பொது மக்களையும்  கொன்றது.

2007-2009. இலங்கை ராணுவத்தின்  கடைசி தாக்குதல். விடுதலைப் புலிகளை   முழுவதுமாய் அழித்தது . அவர்களுடன் சேர்த்து  அப்பாவி பொதுமக்கள் 3,00,000 பேரையும் அழித்தது..  தமிழர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான்  என்றாலும்   சரித்திரத்தை   சற்றே பின்னோக்கிப் பார்க்க வேண்டிய  அவசியம் .ஏற்பட்டதால் பார்க்கின்றேன்

1971-1976 தமிழகத்தின் முதல்வராய்  கலைஞர் கருணாநிதி.
1989-1991 தமிழகத்தில்  மீண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சி
2006-2011 கடைசியாய் மீண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சி.
.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப் படும் போது எல்லாம்  தமிழகத்தில் கலைஞர் முதல்வராய் இருந்தது மட்டுமல்ல  கடைசி கட்டப் பேர் உச்ச கட்டத்தில் இருந்த போது   மத்தியிலும் திமுக அமைச்சரவையில் இருந்துள்ளது.எல்லாம் முடிந்து  ஒரு வம்சமே சுடுகாடான பின் திமுக  மத்திய அரசில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.

இன்று  கச்சத் தீவு  தமிழகத்திற்க்கு உரிமையானது .ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு   உட்பட்டு இருந்த இடம் என்று   கலைஞர் வாதிடுகிறார். அவர்  தலைமையில் உள்ள டெசோ  நீதி மன்றத்தில் வழக்காடுகிறது இது சம்பந்தமாய்!!  தமிழர்களுக்கு இலங்கையில் சிறப்பு அந்தஸ்த்து அளிக்கப் பட வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைக்கிறார்.

வயதில் மூத்த ஒரு அரசியல்வாதி அரசியல் லாபத்திற்க்காக இலங்கைப் பிரச்சினையை  கையிலேடுத்துக்   கொண்டு பேசுவது கண்ட ஆற்றாமையில் எழுதப் பட்டதே இந்தப் பதிவு..

No comments:

Post a Comment