தமிழக அரசியல் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் ஒரு சிறு கண்ணோட்டம். தமிழகத்தில் 10 % மேல் ஒட்டு வாங்கக் கூடிய கட்சிகள் என்று பார்த்தால் திமுக , அதிமுக, பாமக மற்றும் தேமுதிக .
இவற்றின் தலைவர்கள் தலைமைப் பதவிக்கு வந்த விதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.
. திமுக தலைவர் கலைஞர் அண்ணா வின் மறைவிற்க்கு பிறகு இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளி விட்டு தலைவர்.ஆனார்.. நெடுஞ்செழியனும் தனக்கு திமுகாவில் வாய்ப்பு இல்லை என்றும் நம்பர் இரண்டுதான் என்று தெரிந்து கொண்டார். திமுகவில் கலைஞருக்கும் எம்ஜிஅர் க்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட போட்டியில் எம்ஜி அர் பிரிந்து சென்று அதிமுக ஆரம்பித்தார்.. மக்களிடம் ஜாதி வெறியை தூண்டி விட்டு ராமதாஸ் பாமக வை ஆரம்பித்தார். விஜய காந்தும் கலைஞருடன் ஏற்பட்ட சொந்த விரோதத்தின் காரணமாய் தேமுதிக வை ஆரம்பித்தார்.
ஏன் இந்த முன்னுரை என்று கேட்பது தெரிகிறது.!!!!!!
தமிழகத்தில் தலைமைக்கு வந்த எந்த ஒரு தலைவனும் நாட்டிற்க்கு நல்லது செய்ய வேண்டும் என்று வரவில்லை. புதிதாய் கட்சி ஆரம்பித்தவர்களும் அவர்களுக்கென்று ஒரு கொள்கையுடன் கட்சியை ஆரம்பிக்க வில்லை. சுயநலம் ஒன்றே குறியாய் உள்ளவர்கள்தான் இன்று தமிழகத்தின் தலைவர்களாக உள்ளார்களே தவிர இவர்களில் யாரும் சேவை மனப் பான்மையுடன் வந்தவர்கள் இல்லை..
சுய நலத்தின் அடுத்த கட்டமாக கலைஞர் வாரிசு அரசியலை கொண்டு வந்து முதலில் வை. கோ வை ஸ்டாலினுக்கு தடையாய் இருப்பார் என்று வெளியேற்றினார். நெடுஞ்செழியன் இடத்தில் இப்போழுது அனபழகனை என்றும் இரண்டாம் இடத்தில் என்று நிறுத்தி விட்டார். எம்.ஜி.அர்.மறைவுக்குப் பின் அவருக்கு நெருக்கமான இரண்டு பெண்கள் போட்டி இட்டு அதில் ஜெய வென்றார். ஆனால் அவரால் வாரிசைக் கொண்டு வர முடியாத துர்பாக்கியம் மட்டுமல்ல அவரே தனக்குப் பின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்வதை விரும்பவில்லை. காங்கிரஸ் என்றுமே தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் மாநிலத் தலைவர்களை வளர விட்டதில்லை. எப்போழுதும் போல் நேருவுவின் வாரிசுகள் ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள். பாமக வும் அன்புமணி ராமதாசை ,,ராமதாசுக்கு அடுத்தபடியாக கொண்டு வந்து விட்டது. . இன்று ஆரம்பித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவி லதாவை அடுத்த தலைவியாக தயார் படுத்துகிறார். சற்றே கொள்கைப் பிடிப்புள்ள வை கோ வும் கம்யூனிஸ்ட்டுகளும் ஓட்டுக்காக கொள்கையை விட்டு விட்டு கழகங்கள் இரண்டில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றனர்
என்று கொள்கைகள் உடைய கட்சியும்,மக்களுக்கு சேவை செய்யும் மனப் பான்மை உடைய , தலைவர்களும் தமிழகத்தில் உருவாகுகிறார்களோ அன்று தான் தமிழகத்திற்க்கு விடிவுகாலம் பிறக்கும். இது பகல் கனவுதான் என்றாலும். ஒரு வேளை பகல்கனவும் பலிக்கலாம் அல்லவா?
இவற்றின் தலைவர்கள் தலைமைப் பதவிக்கு வந்த விதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.
. திமுக தலைவர் கலைஞர் அண்ணா வின் மறைவிற்க்கு பிறகு இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளி விட்டு தலைவர்.ஆனார்.. நெடுஞ்செழியனும் தனக்கு திமுகாவில் வாய்ப்பு இல்லை என்றும் நம்பர் இரண்டுதான் என்று தெரிந்து கொண்டார். திமுகவில் கலைஞருக்கும் எம்ஜிஅர் க்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட போட்டியில் எம்ஜி அர் பிரிந்து சென்று அதிமுக ஆரம்பித்தார்.. மக்களிடம் ஜாதி வெறியை தூண்டி விட்டு ராமதாஸ் பாமக வை ஆரம்பித்தார். விஜய காந்தும் கலைஞருடன் ஏற்பட்ட சொந்த விரோதத்தின் காரணமாய் தேமுதிக வை ஆரம்பித்தார்.
ஏன் இந்த முன்னுரை என்று கேட்பது தெரிகிறது.!!!!!!
தமிழகத்தில் தலைமைக்கு வந்த எந்த ஒரு தலைவனும் நாட்டிற்க்கு நல்லது செய்ய வேண்டும் என்று வரவில்லை. புதிதாய் கட்சி ஆரம்பித்தவர்களும் அவர்களுக்கென்று ஒரு கொள்கையுடன் கட்சியை ஆரம்பிக்க வில்லை. சுயநலம் ஒன்றே குறியாய் உள்ளவர்கள்தான் இன்று தமிழகத்தின் தலைவர்களாக உள்ளார்களே தவிர இவர்களில் யாரும் சேவை மனப் பான்மையுடன் வந்தவர்கள் இல்லை..
சுய நலத்தின் அடுத்த கட்டமாக கலைஞர் வாரிசு அரசியலை கொண்டு வந்து முதலில் வை. கோ வை ஸ்டாலினுக்கு தடையாய் இருப்பார் என்று வெளியேற்றினார். நெடுஞ்செழியன் இடத்தில் இப்போழுது அனபழகனை என்றும் இரண்டாம் இடத்தில் என்று நிறுத்தி விட்டார். எம்.ஜி.அர்.மறைவுக்குப் பின் அவருக்கு நெருக்கமான இரண்டு பெண்கள் போட்டி இட்டு அதில் ஜெய வென்றார். ஆனால் அவரால் வாரிசைக் கொண்டு வர முடியாத துர்பாக்கியம் மட்டுமல்ல அவரே தனக்குப் பின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்வதை விரும்பவில்லை. காங்கிரஸ் என்றுமே தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் மாநிலத் தலைவர்களை வளர விட்டதில்லை. எப்போழுதும் போல் நேருவுவின் வாரிசுகள் ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள். பாமக வும் அன்புமணி ராமதாசை ,,ராமதாசுக்கு அடுத்தபடியாக கொண்டு வந்து விட்டது. . இன்று ஆரம்பித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவி லதாவை அடுத்த தலைவியாக தயார் படுத்துகிறார். சற்றே கொள்கைப் பிடிப்புள்ள வை கோ வும் கம்யூனிஸ்ட்டுகளும் ஓட்டுக்காக கொள்கையை விட்டு விட்டு கழகங்கள் இரண்டில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றனர்
என்று கொள்கைகள் உடைய கட்சியும்,மக்களுக்கு சேவை செய்யும் மனப் பான்மை உடைய , தலைவர்களும் தமிழகத்தில் உருவாகுகிறார்களோ அன்று தான் தமிழகத்திற்க்கு விடிவுகாலம் பிறக்கும். இது பகல் கனவுதான் என்றாலும். ஒரு வேளை பகல்கனவும் பலிக்கலாம் அல்லவா?
No comments:
Post a Comment