Sunday, September 8, 2013

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம்!! ஒரு சாமானிய குடிமகன் பார்வையில்..

1977  நான் கல்லூரிப் படிப்பை முடித்த ஆண்டு . வேலை தேடினேன் கிடைத்த வேலை  சிறிய கம்பெனி ஒன்றில் கிளர்க்.உத்தியோகம்.. சம்பளம் மாதம் ரூ. 300. அன்று டாலருக்கு நிகரான  ரூபாயின் மதிப்பு ரூ. 30.30. இன்று  என் மகன் பொறியியல் பட்டதாரியாய் வெளியே வந்துள்ளான்  சம்பளம் ரூ.29,500..
இன்று ரூபாயின் மதிப்பு 65.25 காசுகள். இந்தியா முன்னேறி உள்ளதா? அல்லது பின்னேறியுள்ளதா.??

என்னைப்  பொறுத்தவரை இந்தியா  பொருளாதார ரீதியாக நிச்சயம் முன்னேறித்தான் உள்ளது .    அதே அளவு  உழல் செய்வதிலும் 100 மடங்கு முன்னேறியுள்ளதுதான் பிரச்சினை !!.. ஊழல் அற்ற திறமையான  அரசியல் தலைவர்கள் மட்டும் கிடைத்து விட்டால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நம்மால் போட்டி போட  முடியும்.

 தவறை எப்போழுதும் மத்திய அரசின் மீது மட்டும் சுமத்தும் நாம் மாநிலத் தலைவர்களும் மாநில அரசுகளும் மத்தியில் இருந்து பெறப் படும் பணத்தை சரியாக உபயோகப் படுத்துவதில்லை என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். ஒரு மாநிலம் முதலாம் இடத்தில் இருக்கின்றது மற்றொரு மாநிலம்  25 ஆம்  இடத்தில் இருக்கின்றது. பின் தங்கிய மாநிலங்களின்  தலைவர்கள் தங்களின் மாநிலம் முதல்மை  பெற வேண்டும் என்று எண்ணியதாக தெரியவில்லை. உ,.ம். உத்திர பிரதேசம் .பிகார் போன்றவை

. தவறு செய்யும் கட்சியை தேர்தலில் நீக்குவது  எளிது .ஆனால்  புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களும் அதே தவறை செய்யும் போது  ஆட்சி மாற்றத்தினால் நாடு முன்னேற வாய்ப்பு இல்லை என்பது புலனாகிறது.. உ.ம். திமுக வையும்  அதிமுக  வையும் தமிழகத்தில் நாம் மாற்றி மாற்றித்தான் தேர்வு செய்கிறோம். ஆனால்   அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதாய்  தெரியவில்லை.

தொழிற்சாலைகள்  நிறுவப் படுகின்றன.அந்நிய முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன.  தொழிற்துறையில் முன்னேற்றம் காணப் படுகிறது. ஆனால் உணவுப் பொருட்களின் விலை கூடுகிறது. அரசாங்கம் அமைதி காக்கின்றது. விவசாயம் செய்யும்  பரப்பளவு குறைகிறது. விவசாய நிலங்கள் குடியிருப்பு மனைகளாக மாற்றப் படுகின்றது. விவசாயம் செய்பவர்கள்  விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களுக்கு குடியேறுகின்றனர். 10 ஆண்டுகளில் 60 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். பின் உணவுப் பொருட்கள் விலை கூடாமல் இருக்குமா?

பொருளாதார முன்னேற்றம் என்பது அனைத்து துறைகளிலும் சமமாக முன்னேறுவதுதானே அன்றி ஐடி துறையிலும்  தொழில் துறையிலும் மட்டும் முன்னேறுவது அல்ல?

No comments:

Post a Comment