Monday, September 2, 2013

முடிவெடுக்கத் தெரியாத மொய்லி முக்கியமான பெட்ரோலிய துறைக்கு தேவைதானா?

இந்தியாவின்  பொருளாதாரம் ,ரூபாயின் மதிப்பு அனைத்தும்  தற்போது இந்தியா  பெட்ரோல் இறக்குமதிக்கு செலவிடும் டாலரை . பொறுத்து  அமைந்து  விட்.டது. பெட்ரோலிய அமைச்சர்   மொய்லி  சிக்கனமாக செலவிடுங்கள்  பெட்ரோலை  என்று சொல்கிறார். . பெட்ரோல்  விற்பனையை    இரவு நேரத்தில் நிறுத்தி  விடலாமா என்று யோசிக்கிறார். ஈரானில்  இருந்து  இந்திய ரூபாய் கொடுத்து பெட்ரோல்  வாங்கலாமா என்று  சிந்திக்கிறார்.   எப்போது? சிக்கல் தலைக்கு  மேல் வெள்ளம்  போல் ஆனா பிறகு.

ஈரானில்  இருந்து ரூபாயை கொடுத்து பெட்ரோல் இறக்குமதியை செய்வதால் 8.5 பில்லியன் டாலர்  மிச்சமாகும் என்கிறார்.,.ஏன்  இதற்குண்டான முயற்ச்சியை இது வரை எடுக்காமல் இருந்தீர்கள்.? இந்தியாவில் ஒஎன் ஜி சி  (ONGC )யினால் மொத்தம்  111  எண்ணெய்  இருக்கும் இடங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக  புள்ளி விவரம்.கூறுகிறது .  இதில் அரசு அனுமதி பெற்று  இருப்பது 17 மட்டுமே . மீதி  உள்ளவை அரசின் அனுமதியை பெற வரிசையில் உள்ளது.

உள் நாட்டில் எண்ணெய்யை  வைத்துக் கொண்டு இறக்குமதி செய்வதைப் பற்றி மட்டுமே  அமைச்சர் பேசுகிறார்.. ஏன்  அவற்றின் மூலம் எண்ணெய் எடுக்க நடவடிக்கை எடுக்க அரசு தாமதிக்கின்றது.  கேட்டால் சுற்றுப் புறச் சூழல்  அமைச்சகம் ஒப்புதல் மற்றும் நடை முறை சிக்கல்கள் உள்ளதாக  பதில் ..அந்நிய  நாட்டிடம் கையேந்துவதை  விட உள் நாட்டில்  பெட்ரோல்  உற்பத்தியை தொடங்க அரசு  என்று  நடவடிக்கை எடுக்குமோ அன்றுதான் இந்தியாவிற்க்கு விடிவு காலம்.

அடுத்து  நிலக்கரி  இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதிலும் இந்தியாவில் கிட்டத்தட்ட 100 நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளதாயும். உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒன்றின் காரணமாக  உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு ஒன்றின் ஆய்வுக்கு பின்தான்  உற்பத்தியை தொடங்க முடியும் என்று ஒரு பதில்.

.இந்திய அரசின்  செயல்களைப் பார்க்கும்  பழைய தமிழ் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த  வேண்டும்  அயல் நாட்டில் என்பதுதான். அது.

No comments:

Post a Comment