Saturday, August 31, 2013

அன்றைய தலைவர்களும் இன்றைய தலைவர்களும் ஒரு பார்வை.

அன்றைய தலைவர்கள் மக்களுக்காக நாம் என்று இருந்தார்கள். ஆனால் இன்றைய  தலைவர்கள்  நமக்காகத்தான் மக்கள் என்று நினைக்கின்றார்கள்.

அன்று மக்களைத் தாக்கினால் தலைவன் பொங்கினான். இன்று தன்னைத் தாக்கிப் பேசினாலே தொண்டன் பொங்கி எழ வேண்டும் என்று   தலைவன் எதிர் பார்க்கிறான்

 அன்று கட்சி வேறு தான் வேறு என்று தலைவர்கள் இருந்தனர். இன்றைய தலைவர்களோ  தான் தான் கட்சி . என்று நினைக்கிறார்கள்

. கட்சிக்கு நாம் தலைவன்,கட்சியால் கிடைத்தது இந்த தலைவன்  பதவி என்ற எண்ணம் போய் ,விட்டது. இன்றைய தலைவர்கள்  தான்தான் கட்சி,, கட்சி தன  சொல்படிதான்  கேட்க வேண்டும் என்று  நினைக்கின்றார்கள்.

அன்றைய தலைவர்கள் கட்சியின் புகழை பரப்பினர். இன்றைய தலைவர்களோ கட்சியின் புகழ் பரப்பப் படுவதை விட  தன புகழை தொண்டன் பரப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

அன்று  கட்சிக்கு என்று கொள்கைகள் இருந்தன.இன்று  கொள்கைகளை ஒரு சில சீட்டுகளுக்காக  தலைவர்கள்  அடமானம்  வைக்க தயங்குவதில்லை.




No comments:

Post a Comment