Friday, September 13, 2013

தலைவர் பதவியில் மோடி!!. . ஒரு சாமானியனின் பார்வையில்.??

பிஜேபி  இன்  பிரதமர் வேட்பாளராக மோடி  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அத்வானியால்  ஆட்சியில்  இருந்து  அகற்ற முடியாத காங்கிரசை  மோடியை  முன்னிறுத்தி    அகற்றிட  பிஜேபி   முயல்கிறது.  வெற்றிக் கனியை  மோடி பறித்துக் கொடுப்பாரா ? அல்லது   மோடி பலிக்கடாவாக  ஆகப் போகிறாரா?
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்  பதிலைத் தரும். அதற்க்கு  முன்  என்னுடைய பார்வையில்  மோடியின்  அரசியல் பற்றிய ஒரு பார்வை.
மோடியைப் பொறுத்தவரை சிறந்த  நிர்வாகி என்ற பெயர் உள்ளது.  குஜராத்தின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளார்.  பாஜாக தொண்டர்கள் மத்தியில்  பிரபலமானவர். அர்  எஸ்  எஸ்   தலைமையால்  அங்கீகரிக்கப் பட்டு  பதவியும் அளிக்கப்  பட்டவர். ஒரு நாட்டின் பிரதம மந்திரி பதவிக்கு இவை போதும் என்றால்  மோடி  உண்மையிலேயே  ஒரு சிறந்த
தேர்வுதான். ஆனால்  இது ஒரு மாநிலத்தின்  முதல்வர் பதவிக்கு  போதுமான தகுதிதானே தவிர    நாட்டின் பிரதமராக   வேண்டும் என்றால் மேலும் சில தகுதிகள் வேண்டும்.
1)   நாட்டின் தலைமை பதவிக்கு வர எண்ணுபவர்கள், அனைத்து தர மக்களும் அறிந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா போன்ற  பல்வேறு மதங்களைக் கொண்ட நாட்டின் தலைவர் அனைத்து  மத மக்களாலும்  மதிக்கப் பட வேண்டும்.  மோடி யைப் பொறுத்தவரை  இவர் இந்துத்வா என்ற போர்வையில்  இருந்து  இன்னும் வெளிவரவில்லை.
2)  இந்திய மக்களாலும் ஏன்  உலக மக்களாலும் மோடிஎன்ற பெயரை   உச்சரிக்கும் போதெல்லாம்  குஜராத்தின் 2002 கொடுமைதான்     தான் நினைவுக்கு வருகிறது.
3)  ஊழல் அற்ற ஆட்சிய தருவார் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் அடனி அனல் மின் நிலையத்திற்க்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததிலும்.  அடனி  நிறுவனத்தில் இருந்து  வாங்கும் மின்சாரத்திற்கு  யூனிட்டுக்கு ரூ. 2..79. என்று
விலை  நிர்ணயித்ததில் இருந்து  இவரும்   உழலில் சளைத்தவர் அல்ல  என்று நிறுபித்து விட்டார். டாட்டாவிடம்  போட்ட ஒப்பந்தத்தில் யூனிட் ரூ.   2.26  நிறனயித்தவர் நண்பரின் கம்பெனிக்கு  அதிகம் விலை நிர்ணயித்தார்,. இரண்டு ஆண்டுகளில் இதனால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட  இழப்பு  ரூ.1367 கோடி.
4) தலைவன்  என்பவர் தன செய்கைகளாலும் தனி திறமையாலும் தான் முன்னேற வேண்டுமே அன்றி கட்சிக்கு அப்பாற் பட்ட அர்  எஸ் எஸ்  நியமிக்கக் கூடாது. ஜனநாக முறைப் பட தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய ஒருவர்  கட்சிக்கு  அப்பார் பட்ட  ஒரு இயக்கத்தின் சிபாரிசினால்  தேர்ந்தெடுக்கப் படுகிறார்,. நாளை இவர் அற.எஸ் எஸ்  போன்ற  இயக்கத்திற்கு நன்றிக் கடன் பட்டவராகத்தான் இருப்பாரே அன்றி  கட்சிக்கோ அல்லது  மக்களுக்கோ  கடமைப்   பட்டவராக இருக்க  வாய்ப்பில்லை. மத சார்பின்மை  உடைய ஒருவர் இருக்க வேண்டிய இருக்க வேண்டிய  இடத்தில் ஒரு இந்துமதவாதியை  அர் .எஸ் .எஸ்.  நியமித்துள்ளது.
5) எல்லோராலும் மிகவும்  அதிகம் பேசப் படுவது  மூன்று முறை முதல்வர்.  ஒரு சிறிய புள்ளி விவரம்.  குஜராத் போன்ற ஒரு  சிறிய  மாநிலத்தில்  பாஜக சட்டசபை  தேர்தலில் பெற்ற மொத்த வோட்டுக்கள் 47% . எதிர் கட்சி  காங்கிரஸ்  பெற்ற வோட்டுக்கள் 38%.. எல்லா மாநிலங்களைப் போல  காங்கிரசிற்கு அங்கும் சரியான் தலைவர் கிடையாது.  இருந்தும் காங்கிரஸ் முக்கிய எதிர் கட்சியை  38% பெற்றுள்ளது. சொந்த மாநிலத்தில் அவருக்கு முழு ஆதரவு என்பது  ஒரு  மாயை,. அப்படிப் பார்த்தால் இன்று ஜெயா கலைஞரை  எதிர் கட்சி தலைவர் பதவியில் கூட  இருக்க முடியாத படி செய்து விட்டார்.  203  பேரை வெற்றி பெற வைத்து.!!!
6) மோடிக்கு உள்ள ஒரே  வாய்ப்பு  வெற்றி அவரால் கிடைப்பதை விட காங்கிரஸ் மூலம் கிடைக்கத்தான்  வாய்ப்பு அதிகம். திறமையற்ற காங்கிரஸ் நிர்வாகம், பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி மொத்தத்தில் பொருளாதாரத்தை சீரழித்ததின்   மூலம் காங்கிரஸ்  பிஜேபிக்கும்   மோடிக்கும்  ஒரு அறிய வாய்ப்பை  அளித்துள்ளது. அனைத்துக்கும் சிகரமாய்  ஊழலில்  உலகளவில்  சாதனை புரிந்ததின் மூலம்  மோடி வெற்றிக் கனியை  கைப் பற்ற வாய்ப்பு  உள்ளது.


No comments:

Post a Comment