Monday, September 9, 2013

புரட்டு நாத்திக வாதிகளும் அவர்களை பின்பற்றும் ஆட்டு மந்தைகளும்.

தமிழகத்தில் ஒவ்வொரு இந்துப்  பண்டிகை  வரும் போதும்  நாத்திகவாதிகளுக்கு   திடீர் என்று   விழிப்பு வந்துவிடும். உடன் இந்து பண்டிகைகளையும், கடவுள்களையும், தரக் குறைவாக  பேசவும் எழுதவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.  பெரியாரின்  கொள்கைகள் திடீர் என்று நினைவுக்கு வந்து விடும்.   ஏன்   இந்த   இந்து மத எதிர்ப்பு..?

கடவுள் மீது நம்பிக்கை இல்லையா  அனைத்து கடவுள்களையும் மத  வித்தியாசம் பார்க்காமல் திட்டி தீர்த்து விடுங்கள்.  ஏதோ  மற்ற மதங்களும் கடவுள்களும் அறிவு பூர்வமாக  இருப்பது போலவும். இந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கை இருப்பது போலவும்  பேசும் இந்த வெளி வேசம் ஏன் ? இதில் வேடிக்கை என்னவென்றால் இந்து மதத்தில் உள்ள குறைகளை இவன் சொல்வானாம் , அதை ஆதரித்து மாற்று மதத்தினர் சிலர்* எழுதவும் பேசவும் செய்வார்களாம்.. நான்  அறிந்த வரை தமிழகத்தில்* எந்த ஒரு இந்துவும் மாற்று  மதத்தின் பண்டிகைகளையும் நம்பிக்கையையும் குறை சொன்னதில்லை .

அவரவர்க்கு அவரவர் மதங்கள் மதிப்பு   மிக்கவை..   பின் மத  நல்லிணக்கம் என்பது எப்படி உருவாகும்.  இப்படிப் பட்ட ஒரு சிலராலே ஹிந்துத்வா கொள்கையை பிஜேபி   இந்தியாவில்  பரப்பப் பார்க்கின்றது. தென் மாநிலங்களில்  குறிப்பாக தமிழ் நாடு,கேரளா, ஆந்திரா,  போன்றவற்றில்  பிஜேபி ஆல் ஊடுருவ முடியாததற்கு காரணம் இங்கே மக்கள் மத சார்பின்மை கொள்கை உடையவர்களாய் உள்ளதுதான். இதை மாற்று மதத்தை சார்ந்த நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

.இன்று மட்டும் நான் இந்து மதத்தைப் பற்றி முகனூலில் தவறாக எழுதிய 5 நண்பர்களை என் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கியுள்ளேன் . இதில் 3 பேர் மாற்று மதத்தினர்.  மதங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள்  என்ற  எண்ணம் வளர வேண்டும்..மதத்தை  ஒட்டு வங்கிக்காக உபயோகிக்கும்  அரசியல்வியாதிகளின் வலையில் விழாதீர்கள் .என்று நண்பர் களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜெய்  ஹிந்த் .

No comments:

Post a Comment