Saturday, August 31, 2013

இளம் பாலியல் குற்றவாளிகளை ஊக்கு விக்கும் ஒரு தீர்ப்பு.?

செய்யும் தவறு என்ன என்று தெரியாமல் ஒருவன் குற்றத்தை செய்தால்  கருணை  காட்டுவதில்  தவறில்லை. இளம் வயதில் ஒருவன் பசிக்கு திருடுகிறான் என்றால் வறுமை கண்ணை மறைத்து விட்டது தெரியாமல் செய்து விட்டான் என்று கூட சொல்லலாம் திருடியது திட்டமிட்டு செய்யப் படவில்லையேன்றால்?

பெண்களை இளம் வயதில் ஈவ் டீசிங் செய்து விட்டான் என்றால் பருவக் கோளாறு என்று கூட மன்னித்து விடலாம். ஆனால் இந்த  வழக்கில்  போலீஸ் தரப்பிலிருந்து அந்த பெண்ணிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டவன் என்ற  முறையில்   குற்றம் சுமத்தப் பட்ட பின்னும்  அவன் மைனர்  ,18 வயதை அடைவதற்கு முன் செய்த தவறு என்று சொல்லி மைனருக்கான அதிக பட்ச தண்டனையான 3 ஆண்டுகள் மட்டும்  நீதி வழங்கியிருப்பது மக்களுக்கு நீதித் துறை மீதிருந்த மரியாதையை இழக்கச் செய்துள்ளது..

மைனர் ஒருவன் மது அருந்தி ,தவறான நேக்கத்துடன்  கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு பெண்ணை  கூட்டிச் சென்று, அவள் கூட்டாளியை தாக்கி, பின் அந்த பெண்ணையும்  தாக்கி  கொடூரமான முறையில்  பாலியல்  குற்றம் செய்து அவள் சாவுக்கு காரணமாய் இருந்தூள்ளான். ஒவ்வொரு குற்றத்திற்கும் 3  ஆண்டுகள் வீதம் போட்டல் கூட  15 ஆண்டுகள் தண்டனை .கொடுத்திருக்கலாம்.
சட்டப் புத்தகத்தை அப்படியே வரிக்கு  வரி பின் பற்றி நீதி வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை. சந்தர்ப்ப சூழ் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு  நீதி  வழங்கியிருக்கலாம்.எத்தனையோ தீர்ப்புகளை பார்த்துள்ளோம், திட்டமிட்டு செய்யப் பட்ட  கொலையல்ல ஆகவே தூக்கு தண்டனை விதிக்கப் படாமலும், திட்டமிட்டு கொடூரமாய் செய்த கொலைகளுக்கு நீதி அரசர்கள் மரண தண்டனை அளித்துள்ளதையும்  பார்த்துள்ளோம் . இங்கே பாதிக்க்கப் பட்டது ஒரு பெண்.,நீதியை வழங்கியதும் ஒரு பெண்  நீதிபதி.. ஆனால் தவறான நீதி வழங்கப் பட்டு விட்டது.

No comments:

Post a Comment