Wednesday, August 28, 2013

காவல் துறை உங்கள் நண்பன்.!!!!!!!!!!!

காவல் துறையி பல நல்ல திறமையான,நாணயமான  அதிகாரிகள் உள்ளனர்  சில புல்லுருவிகளால்  அந்தத் துறைக்கே கெட்ட  பெயர் ஏற்படுகிறது .இந்த பதிவில் அந்த ஒரு சிலரைப்   பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

காவல்துறையின் கடமைகள் சட்டம் ஒழுங்கை காப்பது,கிரிமினல் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது,கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது ,போக்குவரத்தை சரி செய்வது நீதி மன்றங்கள் இடும் கட்டளைகளை  நிறை வேற்றுவது என்று  சொல்லிக் கொண்டே போகலாம்..ஆனால் நடப்பது  பல இடங்களில் வேறு விதமாய் இருக்கின்றது.
.
போக்கு வரத்தை சரி செய்யும் காவலரை   கண்டவுடன்  நம்மையும் அறியாமல் நம்  கை சட்டையில் பணம் இருக்கின்றதா  காவலருக்கு கொடுக்க என்றுதான்  போகிறது. அனைத்து தஸ்தாவேஜிகள் இருந்தாலும் நம்மால்  தடுக்க முடியாத அநிச்சை செயலாகி   விட்டது..காவலர்கள்  குடியிருப்பிலேயே ஒரு பெண் காவலரிடமே திருட்டு நடந்த சம்பவமும் நடை பெற்றுள்ளது 
.
பாஸ்போர்ட்  பெற  காவல் நிலைய  விசாரணை அறிக்கை  தேவை  என்று ஒரு  சட்டம்... நடப்பது என்னை 300 ரூபாய் கொடுத்தால் வீட்டுக்கு வந்து விசாரிக்காமலே  அறிக்கை கொடுத்து விடுகிறார்கள் காவல் துறையினர்.பின் எதற்க்கு இப்படி ஒருவிதி குற்றம் செய்பவர்கள் பணத்தால் சட்டத்தையும் அதன் பாது காவலர்களையும் . வாங்கி விட  முடியும் என்று நினைக்கின்றார்கள்.
சரி ஏன்  இந்த  முன்னுரை என்று கேட்கலாம். சமீபத்தில் சட்டிஸ்கரில் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரும்  அவர் கீழ் வேலை பார்த்த 3 துணை  இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை படித்ததால் தோன்றிய பதிவு இது. கள்ளச் சாராயம் காச்சியவர்கள் மற்றும் மற்ற குற்றங்கள் செய்தவர்களிடம் இருந்து பெற்ற மாமூலை பிரிப்பதில் அதிகாரிகளுக்கு இடையே சண்டை.காரணம் இன்ஸ்பெக்டருக்கு மாறுதல் கிடைத்து விட்டதால் தர மாட்டோம் பங்கை என்று உதவியாளர்கள் தகராறு.செய்ய ,இன்ஸ்பெக்டர் ஊர் பஞ்சாயத்து தலைவர்களை தனக்கு ஆதரவாய்   பேச அழைத்து வந்துள்ளார்.!!!உதவியாளர்கள் அவர்களை அடிக்க,பதிலுக்கு  கிராமமே திரண்டு வந்து காவல் நிலையத்தை தாக்கியுள்ளது.!!!!

வருமானம் குறைவாக  இருப்பதால் இவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறார்களா?   அல்லது  சட்டம்  வழங்கியுள்ள அதிக  படியான  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா?  வருமானத்தை அரசு கூட்டிக் கொடுக்க முடியும்...ஏற்கனவே இவர்களுக்கு    அரசு .குறைந்த  வாடகையில் காவலர் குடியிருப்பு   கட்டிக் கொடுத்துள்ளது.சலுகை விலையில்  உணவுப் பொருட்கள் கொடுத்துள்ளது. இன்னும் என்ன  பார்க்கிறார்கள் இவர்கள்.??காவல்துறை எங்கள் நண்பனாக இருக்கவே ஆசைப் படுகிறோம்.

No comments:

Post a Comment