Tuesday, August 27, 2013

மகான் கள் என்ற பெயரில் ஏமாற்றும் ஒநய்கள்.

மனிதன்  தவறு செய்யலாம். ஆனால் மகான் என்ற போர்வையில்  தவறு செய்யும் போதுதான் இழிவு உனக்கு மட்டுமல்ல நீ சார்ந்த மதத்தையும்  பாதிக்கின்றது. மைனர் பெண்ணிடம்  சந்நியாசி  பாலியல் குற்றம் புரிந்தார். உன்னால் எங்களுக்கும் கேவலம். ஒருவரல்ல இருவரல்ல பலர். நித்தியானந்தா,, பிரேமானந்தா  வரிசையில் இன்று  நீயும் சேர்ந்து விட்டாய்.உன்னை பின் பற்றி எத்தனை பக்தர்கள்.? உனக்கு ஆதரவு தர ஒரு அரசியல் கட்சி  பிஜேபி என்ற பெயரில்.

ஏற்கனவே  டெல்லி  பெண்  பாலியல் பலாத் காரத்தின் போதே நீ  சகோதரா என்னை  விட்டு விடு என்று சொல்லியிருந்தால் விட்டிருப்பான் என்று ஒரு புது வியாக்ஞானம்  சொல்லியிருந்தாய். அன்றே மக்கள் உன்னை அடையாளம் காண தவறி விட்டனர்.
லஞ்சம்  வாங்கிய  குற்றத்தை  செய்தவனை நீதி தண்டிக்கின்றது அதன் பின்  வேலையும் இழக்கின்றான் . ஆனல் உன்னைப் போல் தவறு செய்தவன் தண்டனையில் இருந்து  வெளியே  வந்தபின் அதே தவறை செய்கிறீர்கள். மக்களும் பைத்தியக்காரர்கள்போல் உங்களை பின் பற்றுகின்றனர். சமீபத்திய உ.ம். நித்தியானந்தா. !!
அரசு   நடவடிக்கை எடுக்குமா? இவர்களை போல்  தீயவர்களால்   நல்ல ஞானிகளின் பெயருமல்லவா கெடுகிறது..

No comments:

Post a Comment