பங்கு சந்தை பற்றிய விளக்கம்- பாகம் -5
------------------------------------------------------------------
பங்கு சந்தையின் அடிப்படையை இது வரை பார்த்திர்கள். இனி பங்கு வர்த்தகம் செய்யும் முன் கவனிக்க வேண்டியன பற்றி பார்ப்போம்.
முதலில் பங்கு சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்கு முகமாக உள்ளதா ( Market Trend) கவனிக்க வேண்டும். ஏறு முகமாக இருப்பின் முதலீடு செய்வதை பற்றி முடிவு செய்யலாம். இறங்கு முகமாக இருப்பின்
அன்றைய தினம் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். ஏனென்றால் பங்கு சந்தையின் ஏற்ற , இறக்கத்திற்கு ஏற்றவாறே 75% சதவீத பங்குகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்.
அடுத்து ஏறுமுகமாக பங்கு சந்தை இருந்தால் எந்த துறை (Sector) மிக
சிறப்பாக ஏறுமுகமாக இருக்கின்றது என்று பார்க்கவும்.. அதன் பின் அந்த
துறையில் எந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாம் என்பதை பார்க்கவும். உ.ம். கணினி துறை ( I T Sector) ஏறுமுகமாக இருக்கின்றது என்றால் அந்த துறை யின் முக்கிய நிறுவனங்களான Infosys, TCS, HCL, ,Mind Tree போன்ற நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் நிதி நிலை மிகவும் நன்றாய் உள்ளது, என்று பார்க்கவும். மேலே உதாரணத்திற்கு கொடுத்துள்ள நிறுவனங்கள் அனைத்தின் நிதி நிலையும் நன்றாக இருந்தாலும் இதில் எது
மிகவும் சிறப்பாக உள்ளது என்று கவனிக்க வேண்டும். இதை (Fundamental Analysis ) அடிப் படை ஆய்வு என்று கூறுகிறோம்
அடிப்படை ஆய்வு:
-----------------------------
1)கடந்த 4 காலாண்டு லாப நஷ்ட கணக்கு அறிக்கையில் எந்த கம்பெனியின் லாபம் அதற்க்கு முந்தைய காலாண்டு லாபத்தை வீட அதிகம் உள்ளது.
2)புதிய ஆர்டர்கள் எந்த கம்பெனிக்கு அதிகம் கிடைத்துள்ளது.?
3) கம்பெனியின் EPS (Earning per share) சிறப்பாக உள்ளது.?
4) எந்த கம்பெனியின் P/E Raio ( Price earning raio).சிறப்பாக உள்ளது.?
5) எந்த கம்பெனியின் (EBITDA) ((Earning before Intrest ,Income Tax,Depereciation and amortization fund) சிறப்பாக உள்ளது.?
6) கம்பெனியின் பங்கு மீது எவ்வளவு கடன் உள்ளது . இதை Debt to Equity Ratio என்கிறோம்
7) Debt to Equity Ratio எவ்வாறு உள்ளது
8)கம்பெனி தொடர்ச்சியாக டிவிடெண்ட் கொடுத்து வருகிறதா ?
இவற்றை சரி பார்த்து விட்டால் எந்த கம்பெனியில் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டுக்கு உத்திரவாதம் என்பது தெரிந்து விடும்.
நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பங்கு தரகர் தன்னுடைய Softwqare இல் கொடுத்து இருப்பார். ஆகையால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இருந்தாலும் 1) EPS 2) P/E Ratio 3)EBITDA
இந்த மூன்றைப் பற்றியும் ஒரு சிறு விளக்கம் தந்து விடுகிறேன்.
Profit of the compeny
EPS= ----------------------------
Total No. of outstanding share
இந்த கணக்கின் படி பார்க்கும் போது ஒரு பங்குக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் தெரிய வரும். பங்கிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் அதிகம் இருந்தால் கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது
Current market price of the share
P/E Ratio -------------------------------------------
Earning per share
உ.ம். தற்போதைய பங்கின் விலை 200 ஆக இருந்தால் பங்கிற்கு லாபம் 10 ஆக இருந்தால் 200/10 =P/E Ratio 20
அடுத்து EBITDA : ( Earning before Intrest, Tax, Depreciation and provison for Amortization Fund) வட்டி தொகை , வருமான வரி , தேய்மானம், மற்றும் கம்பெனியின் பிற்கால தேவைக்காக எடுத்து வைக்கும் நிதி இவற்றை லாபத்தில் இருந்து கழிக்குமுன் காட்டும் லாபத்தையே EBITDA .லாபத்தின் அளவு அதிகம் இருப்பின் கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது என்று அர்த்தம்.
Debt to Equity = Total Debt
--------------------------- இதன் முலம் ஒரு கம்பெனியின்
Total number of share
பங்கின் மீது உள்ள கடன் எவ்வளவு என்று தெரியும். கடன் சதவீதம் அதிகம் இருந்தால் அந்த கம்பெனியின் பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.
இப்போழுது ஒரளவு கம்பெனி யின் நிதி நிலை பற்றி நீங்கள் அறிந்திரு
பீர்கள் அடுத்த பதிவில் தொழில் சம்பந்தப் பட்ட விஷயங்களை வைத்து ஆய்வு ( Technical Analysis ) செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..
-
------------------------------------------------------------------
பங்கு சந்தையின் அடிப்படையை இது வரை பார்த்திர்கள். இனி பங்கு வர்த்தகம் செய்யும் முன் கவனிக்க வேண்டியன பற்றி பார்ப்போம்.
முதலில் பங்கு சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்கு முகமாக உள்ளதா ( Market Trend) கவனிக்க வேண்டும். ஏறு முகமாக இருப்பின் முதலீடு செய்வதை பற்றி முடிவு செய்யலாம். இறங்கு முகமாக இருப்பின்
அன்றைய தினம் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். ஏனென்றால் பங்கு சந்தையின் ஏற்ற , இறக்கத்திற்கு ஏற்றவாறே 75% சதவீத பங்குகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்.
அடுத்து ஏறுமுகமாக பங்கு சந்தை இருந்தால் எந்த துறை (Sector) மிக
சிறப்பாக ஏறுமுகமாக இருக்கின்றது என்று பார்க்கவும்.. அதன் பின் அந்த
துறையில் எந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாம் என்பதை பார்க்கவும். உ.ம். கணினி துறை ( I T Sector) ஏறுமுகமாக இருக்கின்றது என்றால் அந்த துறை யின் முக்கிய நிறுவனங்களான Infosys, TCS, HCL, ,Mind Tree போன்ற நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் நிதி நிலை மிகவும் நன்றாய் உள்ளது, என்று பார்க்கவும். மேலே உதாரணத்திற்கு கொடுத்துள்ள நிறுவனங்கள் அனைத்தின் நிதி நிலையும் நன்றாக இருந்தாலும் இதில் எது
மிகவும் சிறப்பாக உள்ளது என்று கவனிக்க வேண்டும். இதை (Fundamental Analysis ) அடிப் படை ஆய்வு என்று கூறுகிறோம்
அடிப்படை ஆய்வு:
-----------------------------
1)கடந்த 4 காலாண்டு லாப நஷ்ட கணக்கு அறிக்கையில் எந்த கம்பெனியின் லாபம் அதற்க்கு முந்தைய காலாண்டு லாபத்தை வீட அதிகம் உள்ளது.
2)புதிய ஆர்டர்கள் எந்த கம்பெனிக்கு அதிகம் கிடைத்துள்ளது.?
3) கம்பெனியின் EPS (Earning per share) சிறப்பாக உள்ளது.?
4) எந்த கம்பெனியின் P/E Raio ( Price earning raio).சிறப்பாக உள்ளது.?
5) எந்த கம்பெனியின் (EBITDA) ((Earning before Intrest ,Income Tax,Depereciation and amortization fund) சிறப்பாக உள்ளது.?
6) கம்பெனியின் பங்கு மீது எவ்வளவு கடன் உள்ளது . இதை Debt to Equity Ratio என்கிறோம்
7) Debt to Equity Ratio எவ்வாறு உள்ளது
8)கம்பெனி தொடர்ச்சியாக டிவிடெண்ட் கொடுத்து வருகிறதா ?
இவற்றை சரி பார்த்து விட்டால் எந்த கம்பெனியில் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டுக்கு உத்திரவாதம் என்பது தெரிந்து விடும்.
நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பங்கு தரகர் தன்னுடைய Softwqare இல் கொடுத்து இருப்பார். ஆகையால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இருந்தாலும் 1) EPS 2) P/E Ratio 3)EBITDA
இந்த மூன்றைப் பற்றியும் ஒரு சிறு விளக்கம் தந்து விடுகிறேன்.
Profit of the compeny
EPS= ----------------------------
Total No. of outstanding share
இந்த கணக்கின் படி பார்க்கும் போது ஒரு பங்குக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் தெரிய வரும். பங்கிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் அதிகம் இருந்தால் கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது
Current market price of the share
P/E Ratio -------------------------------------------
Earning per share
உ.ம். தற்போதைய பங்கின் விலை 200 ஆக இருந்தால் பங்கிற்கு லாபம் 10 ஆக இருந்தால் 200/10 =P/E Ratio 20
அடுத்து EBITDA : ( Earning before Intrest, Tax, Depreciation and provison for Amortization Fund) வட்டி தொகை , வருமான வரி , தேய்மானம், மற்றும் கம்பெனியின் பிற்கால தேவைக்காக எடுத்து வைக்கும் நிதி இவற்றை லாபத்தில் இருந்து கழிக்குமுன் காட்டும் லாபத்தையே EBITDA .லாபத்தின் அளவு அதிகம் இருப்பின் கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது என்று அர்த்தம்.
Debt to Equity = Total Debt
--------------------------- இதன் முலம் ஒரு கம்பெனியின்
Total number of share
பங்கின் மீது உள்ள கடன் எவ்வளவு என்று தெரியும். கடன் சதவீதம் அதிகம் இருந்தால் அந்த கம்பெனியின் பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.
இப்போழுது ஒரளவு கம்பெனி யின் நிதி நிலை பற்றி நீங்கள் அறிந்திரு
பீர்கள் அடுத்த பதிவில் தொழில் சம்பந்தப் பட்ட விஷயங்களை வைத்து ஆய்வு ( Technical Analysis ) செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..
-
No comments:
Post a Comment