பங்கு சந்தை பற்றிய விளக்கம் -பாகம்-4
----------------------------------------------------------------------
பங்கு சந்தை என்றால் என்ன என்பதை பற்றி பார்த்தோம் , இனி பங்கு சந்தையில் வியாபாரம் செய்யும் முன் செய்ய வேண்டியன பற்றியும் எப்படி பங்கு சந்தை தரகர்களை தேர்வு செய்வது மற்றும் பங்கு சந்தை வியாபாரம் ஆரம்பிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியும்
இந்த பதிவில் பார்ப்போம்.
எப்படி ஒரு வங்கியில் பணம் போடவும் எடுக்கவும் ஒரு கணக்கை ஆரம்பிக்கிறோமோ அதே போல் பங்கு சந்தையில் வியாபாரம் செய்யவும் ஒரு கணக்கை தொடங்க வேண்டும். இந்த கணக்கை டிமேட் (Demat Account)
என்று அழைக்கிறோம். பங்கு சந்தையில் நாம் நேரடியாக வாங்குபவர்களையோ அல்லது விற்பவர்களையோ சந்தித்து வியாபாரம் செய்ய முடியாது. இதற்கென்று உள்ள பங்கு தரகர்கள் மூலமாகவே நாம்
வியாபாரம் செய்ய முடியும். ஆகையால் மேலே சொன்ன demat Account ஐ
நல்லதொரு பங்கு தரகர்கள் மூலம் தொடங்க வேண்டும்.
பங்கு தரகர்களை தேர்வு செய்யும் முன் அந்த பங்கு தரகர்களை பற்றி ஏற்கனவே வியாபாரம் செய்தவர்கள் முலம் நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். பங்கு வியாபாரத்தில் தரகர்களாக HDFC Bank,ICICI Bank போன்ற வங்கிகளின் துணை நிறுவனங்கள் பங்கு தரகர்களாக செயல் பட்டாலும் அவர்கள் வசூலிக்கும் தரகு கமிஷன் (Brokerage Charges) மிகவும்
அதிக மாக உள்ளது. ஆகையால் தனியார் பங்கு தரகு நிறுவனங்கள்
முலம் வியாபாரம் செய்வது மிக நல்ல லாபத்தை நமக்கு தரும் .
தரகு கமிஷன் ( Brokerage Charge) எவ்வளவு, எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம். (தின வியாபாரத்திற்கு)
HDFC Bank : இதன் பங்கு வர்த்தக நிறுவனமான HDFC Securities நம்மிடம் வசூலிக்கும் தரகை (Brokerage)வைத்து முதலில் ஓர் உதாரணம் பார்ப்போம். HDFC Securities ரூ .100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கும் போது .50 பைசா Brokerage ஆக வசூலிக்கிறார்கள். அதே போல் அந்த பங்கை விற்கும் பொது விற்கும் விலையில் ரூ. 100 க்கு .50 பைசா என்று கணக்கிட்டு
வசூலிக்கிறார்கள்
.
அதாவது ரூ 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்றால் வாங்க .50 பைசா மற்றும் விற்க .50 பைசா வசூலிக்கிறார்கள். விளைவு ஒரு பங்கை நீங்கள் வாங்கி விற்க ரூ. 1 / Brokerage தர வேண்டியுள்ளது. நீங்கள் ரூ. 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்க வேண்டுமானால் ரூ. 101 உங்களின் அடக்க விலையாகிறது. ஆகவே நீங்கள் ரூ.101க்கும் மேல் விற்றால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்க ஆரம்பிக்கும்
தனியார் பங்கு தரகர்களிடம் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்களால் இவ்வளவுதான் தரகு (Brokerage) தர முடியும் என்று பேரம் பேசலாம். உங்களின் முதலீட்டு தொகை அதிகமாய் இருந்தால் உ.ம். ரூ.50,000 க்கு மேல் இருந்தால் ரூ.100 க்கு .10 பைசா வரை நீங்கள் பேரம் பேசலாம். ஆக ரூ. 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்றால் வாங்கும் பொது 10 பைசாவும் விற்கும் பொது 10 பைசாவும் தர முடியும் என்று நீங்கள் தரகாக பேரம் பேசலாம் ஆக நீங்கள் வாங்கி விற்க
தர வேண்டியா தொகை 20 பைசாவாகும். உங்களின் அடக்க விலை ரூ.100.20
(நூறு ரூபாய், இருபது பைசாவாகும்) ஆக உங்களுக்கு மிச்சம் 80 பைசாவாகும். 100 பங்குகளை ரூ,. 100 க்கு வாங்கி ரூ. 101 க்கு விற்பதன் முலம் உங்களுக்கு லாபம் ரூ. 80 கிடைக்கிறது.
பங்கு தரகரை தேர்ந்து எடுத்து விட்ட பின் நீங்கள் அவரிடம் கீழ் கண்டா ஆவணங்களை தர வேண்டும். !
!), Ration Card, or Voter I.D, 2) Pan Card. 3) Cheque Leaf 2 Nos.4) Passport size photos 2 Nos.)
5) 3 Month Bank statement
ஆவணங்களை கொடுத்து ஒரு வாரத்தில் இருந்து 15 தினங்களுக்குள் உங்கள் பெயர் பதிவு செய்ய பட்டுவிடும் இதன் பிறகு நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை தராகரின் கணக்கிற்கு மாற்றிய பின் வியாபாரம் செய்ய தொடங்கலாம்.
இனி நாம் பங்கு சந்தை வியாபாரம் பற்றிய நுணுக்கங்களை
பற்றி பார்ப்போம்.
பங்கு வியாபாரம் செய்வதில் இரண்டு வகை உள்ளது .1) தின் வியாபாரம்,( INTRA DAY) மற்றும் முதலீடு( INVESTMENT) செய்து வியாபாரம் செய்வது.
தின வியாபாரம் செய்ய நல்ல அனுபவம் இருக்க வேண்டும். ஏனென்றால் பங்கு சந்தையில் பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவும் இறங்கவும் செய்யும். பங்கு சந்தையை பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடு பட முடியும். என்னிடம் கேட்டால் புதிய முதலீட்டாளர்கள் தின வியாபாரம் செய்யாமல் இருப்பது நல்லது.
முதலீடு செய்து வியாபாரம் செய்வதில் குறுகிய கால முதலீடு
(Short Term Investment.)ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் வரை வாங்கிய பங்கை வைத்திருந்து எதிர்பார்த்த லாபம் வந்ததும் விற்பது.
நாடு நிலை கால முதலீடு ( Medium Term) : 3 மாதங்களுக்கு மேல் ஆனால் 1 ஆண்டுக்கு முன்பாக பங்குகளை வாங்கி விற்பாதை நாடு நிலை முதலீடு
என்கிறோம்.
ஓராண்டுக்கும் மேல், குறிப்பிட்ட செலவினத்திற்காக முதலீடு செயது
பின் விற்பதை நீண்ட கால முதலீடு (Long Term Investment) என்று கூறுகிறோம்
தின வியாபாரத்தை புதிய முதலீட்டாளர்கள் செய்யாமல் தவிர்ப்பது நலம் என்று நான் கூறினாலும் அனைத்து புதிய முதலீட்டாளர்களும் முதலில்
செய்ய விரும்புவது தின் முதலீடு தான். ஆகையால் தின முதலீடு பற்றி விளக்கி கூறி விடுகிறேன்.
தின வியாபாரத்தில் ஈடு பட அனைவரும் ஆர்வம் காட்ட காரணம்
ஒரே நாளில் முடிந்த வரை லாபத்தை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணமும், கம்பெனி தரும் Margin money ஐ உபயோகப் படுத்திக்க கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். பங்கு சந்தை வியாபார நேரம் காலை
9.15 இல் இருந்து மதியம் 3.30 வரை மட்டுமே.
Margin money என்றால் என்ன என்பதை முதலில் சொல்கிறேன். ஒரு முதலீட்டாளர் செய்யும் முதலீட்டை போன்று 10 மடங்கு பணத்தை கம்பெனி கடனாக தரும். ஆனால் இந்த பணத்தை நீங்கள் வியாபார நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக, அதாவது 3.15 க்கு நீங்கள்
திருப்பி செலுத்தி விட வேண்டும். அதாவது கடனுக்கு வாங்கிய பங்குகளை 3.15 க்கு விற்று விட வேண்டும். அப்படி நீங்கள் விற்க தவறினால் கம்பெனியே அந்த பங்குகளை விற்று விடும்.
உ.ம். நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கம்பெனி உங்களை ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கும்.ரூ. 100 விலையுள்ள பங்குகள் 1,000 வரை இந்த பணத்தை கொண்டு நீங்கள் வாங்கலாம்.. பங்கின் விலை ரூ. 2 உயர்ந்தால் உங்களுக்கு ரூ.2,000 லாபமாக கிடைக்கும். ஆனால் அதே சமயம் ரூ. 2 பங்கின் விலை குறைந்தால் 1000 பங்கிற்கு ரூ. 2000 நஷ்டம் ஏற்படும். அது தவிர்த்து உங்களின் தரகர் தனியாராய் இருந்தால் தரகு தொகை ரூ. 200 உம வங்கி சார்பு நிறுவனமான இருந்தால் ரூ. 1,000 வரை செலுத்த வேண்டி வரும். ஆக ஒரே நாளில் ரூ. 2,000 + தரகுத் தொகை போய் விடும். இதனால்தான் நான் சிறிது அனுபவம் வந்த பின் தின வியாபாரத்தில் ஈடு படலாம் என்று கூறு கிறேன்
இனி பங்குகளை எப்படி வாங்குவது மற்றும் எப்படி விற்பது என்பதை பற்றி பார்ப்போம். கணினி வைத்துள்ளவர்கள் நேரடியாக விற்கவோ அல்லது வாங்கவோ செய்யலாம். இல்லாதவர்கள் பங்கு தரகர்களை
போன் முலம் தொடர்பு கொண்டு வாங்க வேண்டிய கம்பெனியின் பெயர் .,வாங்க வேண்டிய விலை இவற்றை தெரிவித்தால் கம்பெனியின் பிரதிநிதி நம் சார்பாக வாங்கிவிடுவார்.. நாம் கணினி முலம் நேரடியாக வாங்குவதை Online Trading என்றும்,பிரதிநிதி மூலாம் வாங்குவதை Off line Trading என்றும் கூறுகிறோம்
இனி ஆர்டர்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.:
-------------------------------------------------------------------------------------
1) Market Order 2) Limit Order. 3) Stop Loss order 4 ) Short Selling Order
Market Order: மார்க்கெட் ஆர்டர் என்பது கணினியில் எந்த விலையில் விற்கும் அல்லது வாங்கும் விலை காட்டப் படுகிறதோ அதே விலைக்கு உடனே வாங்கி விடுவது.
2) Limit Order: இந்த வகை ஆர்டர்களில் நீங்கள் எந்த விலைக்கு வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புகிறீர்களோ அந்த விலையை குறிப்பிட்டு பதிவு செய்தால் அந்த விலை வந்த பின்தான் வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும்.
3) Stop Loss order : இந்த வகை ஆர்டர்கள் முலம் உங்களுக்கு ஏற்பட இருக்கும்
நஷ்டத்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதை பற்றி விரிவாக பின் கூறுகிறேன்.
4) Short Selling Order:பொதுவாக ஒரு பொருளை வாங்கியபின் தான் விற்க முடியும் இந்த வகை வியாபாரத்தில் நம்மிடம் இல்லாத கம்பெனியின்
பங்குகளை முதலில் விற்று விட்டு பின் பங்கு சந்தை முடிவதற்கு முன் அதாவது 3.15 க்குள் அந்த பங்கை வாங்கி விட வேண்டும். கிட்ட தட்ட இது
ஒரு தலைகீழ் வியாபாரம் ஆகும். புதிய முதலியிட்டாளர்கள் கண்டிப்பாக இந்த வியாபாரம் செய்ய கூடாது..
Stop Loss order மற்றும் Short Selling Order இவை இரண்டை பற்றியும் அடுத்த பாகத்தில் விரிவாக கூறுகிறேன் . .
----------------------------------------------------------------------
பங்கு சந்தை என்றால் என்ன என்பதை பற்றி பார்த்தோம் , இனி பங்கு சந்தையில் வியாபாரம் செய்யும் முன் செய்ய வேண்டியன பற்றியும் எப்படி பங்கு சந்தை தரகர்களை தேர்வு செய்வது மற்றும் பங்கு சந்தை வியாபாரம் ஆரம்பிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியும்
இந்த பதிவில் பார்ப்போம்.
எப்படி ஒரு வங்கியில் பணம் போடவும் எடுக்கவும் ஒரு கணக்கை ஆரம்பிக்கிறோமோ அதே போல் பங்கு சந்தையில் வியாபாரம் செய்யவும் ஒரு கணக்கை தொடங்க வேண்டும். இந்த கணக்கை டிமேட் (Demat Account)
என்று அழைக்கிறோம். பங்கு சந்தையில் நாம் நேரடியாக வாங்குபவர்களையோ அல்லது விற்பவர்களையோ சந்தித்து வியாபாரம் செய்ய முடியாது. இதற்கென்று உள்ள பங்கு தரகர்கள் மூலமாகவே நாம்
வியாபாரம் செய்ய முடியும். ஆகையால் மேலே சொன்ன demat Account ஐ
நல்லதொரு பங்கு தரகர்கள் மூலம் தொடங்க வேண்டும்.
பங்கு தரகர்களை தேர்வு செய்யும் முன் அந்த பங்கு தரகர்களை பற்றி ஏற்கனவே வியாபாரம் செய்தவர்கள் முலம் நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். பங்கு வியாபாரத்தில் தரகர்களாக HDFC Bank,ICICI Bank போன்ற வங்கிகளின் துணை நிறுவனங்கள் பங்கு தரகர்களாக செயல் பட்டாலும் அவர்கள் வசூலிக்கும் தரகு கமிஷன் (Brokerage Charges) மிகவும்
அதிக மாக உள்ளது. ஆகையால் தனியார் பங்கு தரகு நிறுவனங்கள்
முலம் வியாபாரம் செய்வது மிக நல்ல லாபத்தை நமக்கு தரும் .
தரகு கமிஷன் ( Brokerage Charge) எவ்வளவு, எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம். (தின வியாபாரத்திற்கு)
HDFC Bank : இதன் பங்கு வர்த்தக நிறுவனமான HDFC Securities நம்மிடம் வசூலிக்கும் தரகை (Brokerage)வைத்து முதலில் ஓர் உதாரணம் பார்ப்போம். HDFC Securities ரூ .100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கும் போது .50 பைசா Brokerage ஆக வசூலிக்கிறார்கள். அதே போல் அந்த பங்கை விற்கும் பொது விற்கும் விலையில் ரூ. 100 க்கு .50 பைசா என்று கணக்கிட்டு
வசூலிக்கிறார்கள்
.
அதாவது ரூ 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்றால் வாங்க .50 பைசா மற்றும் விற்க .50 பைசா வசூலிக்கிறார்கள். விளைவு ஒரு பங்கை நீங்கள் வாங்கி விற்க ரூ. 1 / Brokerage தர வேண்டியுள்ளது. நீங்கள் ரூ. 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்க வேண்டுமானால் ரூ. 101 உங்களின் அடக்க விலையாகிறது. ஆகவே நீங்கள் ரூ.101க்கும் மேல் விற்றால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்க ஆரம்பிக்கும்
தனியார் பங்கு தரகர்களிடம் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்களால் இவ்வளவுதான் தரகு (Brokerage) தர முடியும் என்று பேரம் பேசலாம். உங்களின் முதலீட்டு தொகை அதிகமாய் இருந்தால் உ.ம். ரூ.50,000 க்கு மேல் இருந்தால் ரூ.100 க்கு .10 பைசா வரை நீங்கள் பேரம் பேசலாம். ஆக ரூ. 100 பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்றால் வாங்கும் பொது 10 பைசாவும் விற்கும் பொது 10 பைசாவும் தர முடியும் என்று நீங்கள் தரகாக பேரம் பேசலாம் ஆக நீங்கள் வாங்கி விற்க
தர வேண்டியா தொகை 20 பைசாவாகும். உங்களின் அடக்க விலை ரூ.100.20
(நூறு ரூபாய், இருபது பைசாவாகும்) ஆக உங்களுக்கு மிச்சம் 80 பைசாவாகும். 100 பங்குகளை ரூ,. 100 க்கு வாங்கி ரூ. 101 க்கு விற்பதன் முலம் உங்களுக்கு லாபம் ரூ. 80 கிடைக்கிறது.
பங்கு தரகரை தேர்ந்து எடுத்து விட்ட பின் நீங்கள் அவரிடம் கீழ் கண்டா ஆவணங்களை தர வேண்டும். !
!), Ration Card, or Voter I.D, 2) Pan Card. 3) Cheque Leaf 2 Nos.4) Passport size photos 2 Nos.)
5) 3 Month Bank statement
ஆவணங்களை கொடுத்து ஒரு வாரத்தில் இருந்து 15 தினங்களுக்குள் உங்கள் பெயர் பதிவு செய்ய பட்டுவிடும் இதன் பிறகு நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை தராகரின் கணக்கிற்கு மாற்றிய பின் வியாபாரம் செய்ய தொடங்கலாம்.
இனி நாம் பங்கு சந்தை வியாபாரம் பற்றிய நுணுக்கங்களை
பற்றி பார்ப்போம்.
பங்கு வியாபாரம் செய்வதில் இரண்டு வகை உள்ளது .1) தின் வியாபாரம்,( INTRA DAY) மற்றும் முதலீடு( INVESTMENT) செய்து வியாபாரம் செய்வது.
தின வியாபாரம் செய்ய நல்ல அனுபவம் இருக்க வேண்டும். ஏனென்றால் பங்கு சந்தையில் பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவும் இறங்கவும் செய்யும். பங்கு சந்தையை பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடு பட முடியும். என்னிடம் கேட்டால் புதிய முதலீட்டாளர்கள் தின வியாபாரம் செய்யாமல் இருப்பது நல்லது.
முதலீடு செய்து வியாபாரம் செய்வதில் குறுகிய கால முதலீடு
(Short Term Investment.)ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் வரை வாங்கிய பங்கை வைத்திருந்து எதிர்பார்த்த லாபம் வந்ததும் விற்பது.
நாடு நிலை கால முதலீடு ( Medium Term) : 3 மாதங்களுக்கு மேல் ஆனால் 1 ஆண்டுக்கு முன்பாக பங்குகளை வாங்கி விற்பாதை நாடு நிலை முதலீடு
என்கிறோம்.
ஓராண்டுக்கும் மேல், குறிப்பிட்ட செலவினத்திற்காக முதலீடு செயது
பின் விற்பதை நீண்ட கால முதலீடு (Long Term Investment) என்று கூறுகிறோம்
தின வியாபாரத்தை புதிய முதலீட்டாளர்கள் செய்யாமல் தவிர்ப்பது நலம் என்று நான் கூறினாலும் அனைத்து புதிய முதலீட்டாளர்களும் முதலில்
செய்ய விரும்புவது தின் முதலீடு தான். ஆகையால் தின முதலீடு பற்றி விளக்கி கூறி விடுகிறேன்.
தின வியாபாரத்தில் ஈடு பட அனைவரும் ஆர்வம் காட்ட காரணம்
ஒரே நாளில் முடிந்த வரை லாபத்தை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணமும், கம்பெனி தரும் Margin money ஐ உபயோகப் படுத்திக்க கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். பங்கு சந்தை வியாபார நேரம் காலை
9.15 இல் இருந்து மதியம் 3.30 வரை மட்டுமே.
Margin money என்றால் என்ன என்பதை முதலில் சொல்கிறேன். ஒரு முதலீட்டாளர் செய்யும் முதலீட்டை போன்று 10 மடங்கு பணத்தை கம்பெனி கடனாக தரும். ஆனால் இந்த பணத்தை நீங்கள் வியாபார நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக, அதாவது 3.15 க்கு நீங்கள்
திருப்பி செலுத்தி விட வேண்டும். அதாவது கடனுக்கு வாங்கிய பங்குகளை 3.15 க்கு விற்று விட வேண்டும். அப்படி நீங்கள் விற்க தவறினால் கம்பெனியே அந்த பங்குகளை விற்று விடும்.
உ.ம். நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கம்பெனி உங்களை ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கும்.ரூ. 100 விலையுள்ள பங்குகள் 1,000 வரை இந்த பணத்தை கொண்டு நீங்கள் வாங்கலாம்.. பங்கின் விலை ரூ. 2 உயர்ந்தால் உங்களுக்கு ரூ.2,000 லாபமாக கிடைக்கும். ஆனால் அதே சமயம் ரூ. 2 பங்கின் விலை குறைந்தால் 1000 பங்கிற்கு ரூ. 2000 நஷ்டம் ஏற்படும். அது தவிர்த்து உங்களின் தரகர் தனியாராய் இருந்தால் தரகு தொகை ரூ. 200 உம வங்கி சார்பு நிறுவனமான இருந்தால் ரூ. 1,000 வரை செலுத்த வேண்டி வரும். ஆக ஒரே நாளில் ரூ. 2,000 + தரகுத் தொகை போய் விடும். இதனால்தான் நான் சிறிது அனுபவம் வந்த பின் தின வியாபாரத்தில் ஈடு படலாம் என்று கூறு கிறேன்
இனி பங்குகளை எப்படி வாங்குவது மற்றும் எப்படி விற்பது என்பதை பற்றி பார்ப்போம். கணினி வைத்துள்ளவர்கள் நேரடியாக விற்கவோ அல்லது வாங்கவோ செய்யலாம். இல்லாதவர்கள் பங்கு தரகர்களை
போன் முலம் தொடர்பு கொண்டு வாங்க வேண்டிய கம்பெனியின் பெயர் .,வாங்க வேண்டிய விலை இவற்றை தெரிவித்தால் கம்பெனியின் பிரதிநிதி நம் சார்பாக வாங்கிவிடுவார்.. நாம் கணினி முலம் நேரடியாக வாங்குவதை Online Trading என்றும்,பிரதிநிதி மூலாம் வாங்குவதை Off line Trading என்றும் கூறுகிறோம்
இனி ஆர்டர்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.:
-------------------------------------------------------------------------------------
1) Market Order 2) Limit Order. 3) Stop Loss order 4 ) Short Selling Order
Market Order: மார்க்கெட் ஆர்டர் என்பது கணினியில் எந்த விலையில் விற்கும் அல்லது வாங்கும் விலை காட்டப் படுகிறதோ அதே விலைக்கு உடனே வாங்கி விடுவது.
2) Limit Order: இந்த வகை ஆர்டர்களில் நீங்கள் எந்த விலைக்கு வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புகிறீர்களோ அந்த விலையை குறிப்பிட்டு பதிவு செய்தால் அந்த விலை வந்த பின்தான் வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும்.
3) Stop Loss order : இந்த வகை ஆர்டர்கள் முலம் உங்களுக்கு ஏற்பட இருக்கும்
நஷ்டத்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதை பற்றி விரிவாக பின் கூறுகிறேன்.
4) Short Selling Order:பொதுவாக ஒரு பொருளை வாங்கியபின் தான் விற்க முடியும் இந்த வகை வியாபாரத்தில் நம்மிடம் இல்லாத கம்பெனியின்
பங்குகளை முதலில் விற்று விட்டு பின் பங்கு சந்தை முடிவதற்கு முன் அதாவது 3.15 க்குள் அந்த பங்கை வாங்கி விட வேண்டும். கிட்ட தட்ட இது
ஒரு தலைகீழ் வியாபாரம் ஆகும். புதிய முதலியிட்டாளர்கள் கண்டிப்பாக இந்த வியாபாரம் செய்ய கூடாது..
Stop Loss order மற்றும் Short Selling Order இவை இரண்டை பற்றியும் அடுத்த பாகத்தில் விரிவாக கூறுகிறேன் . .
No comments:
Post a Comment