Friday, August 8, 2014

பங்கு வர்த்தகம் லாபமான தொழிலா??

பங்கு சந்தை என்றவுடன் பொதுவாக நம் மனதில் தோன்றுவது   இது  கிட்ட
தட்ட சூதாட்டம் போன்றது. .பங்கு சந்தையில்  முதலீடு செய்து  முன்னேறியவர்கள் யாரும் இல்லை.. மிகவும் ரிஸ்க்   ஆனா வியாபாரம்.
உண்மையில் அந்த அளவு  மிக மோசமான வியாபாரமா? ஒரு பார்வை.

எந்த ஒரு வியாபாரமாய் இருந்தாலும் முதலில் அதை    நன்கு தெரிந்து கொண்டு இறங்கினால் மட்டுமே  லாபம் கிடைக்கும்.  துரதிர்ஷ்டவசமாக  பங்கு வர்த்தகத்தில் நுழையும் 90% பேர்  பங்கு வர்த்தகம் பற்றி அடிப் படை   விஷயம் கூட தெரியாமல் இறங்குவது தான் தோல்விக்கு காரணம். முன் பின் தெரியாத  ஒரு  ஷேர் ப்ரோக்கிங் கம்பெனியின்  பிரதிநிதி ஆசை வார்த்தை காட்டி சேர்த்து விட்டு சென்று விடுகிறான் . தினசரி வாங்க வேண்டிய பங்குகள் பற்றி (Tips) தகவல் தருவோம். இவ்வளவு முதலீடு போட்டல் பேங்க் வட்டியை விட 10மடங்கு லாபம் கிடைக்கும் என்று புள்ளி விவரம்  கொடுப்பான். இவர்களும் ஆசை பட்டு இறங்கி  விட்டு,  பின் போட்ட பணம் அத்தனையும் போய் விட்டது என்று 3 மாதத்திலேயே  தலையில் கை வைத்து கொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். நிச்சயம் பேங்க் வட்டியை விட கூட கிடைக்கும் ஆனால் வியாபாரம் ஆரம்பிக்கு முன் அதை பற்றி முழுவதும் தெரியாமல் இறங்கி விட்டு வியாபாரம் சரியில்லை என்று கூறுவது எந்த விதத்தில்  நியாயம்.??
பங்கு  வர்த்தகத்தில் இறங்கும் முன் கவனிக்க வேண்டியவை:

1)மிக  மிக குறைந்த வியாபார முதலீடு 10,000 வது இருந்தால் தான்  ஒரளவு லாபம் சம்பாதிக்க  முடியும்..
2)பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்த நண்பர்களிடமோ அல்லது புரோக்கர் அலுவலகத்தில் இருந்து வரும்  விற்பனை  பிரதிநிதியுடனோ விவாதித்து அறிந்து கொள்ளுங்கள்.
3)ஆங்கில சேனல்கள்(Bloomberg, ND TV Profit, ET Now போன்றவற்றை குறைந்த பட்சம் தினம் 1 மணி நேரம்  பாருங்கள்.
4)Money control,Money rediff.com.,Niffty 50 Heat map.தினம் பாருங்கள்.

இனி  நீங்கள் வியாபாரம்  தொடங்கு முன் கவனிக்க வேண்டியவை  ::
1)சிறந்த புரோக்கர் யார் என்று விசாரியுங்கள்.
2)புரோக்கரேஜ் கமிஷன்  பேரம் பேசி வாங்குங்கள்.
3)கம்பெனி கொடுக்கும் சாப்ட்வேர்  எப்படி  உபயோகப் படுத்துவது  என்று  நன்கு   தெரிந்து கொள்ளுங்கள்.
4)பணத்தை வைத்து வியாபாரம் செய்யுமுன் நீங்களே  எந்த பங்கில் எந்த விலையில் போடலாம் என்று முடிவெடுத்து  ஒரு நோட்டில்  குறித்து வைத்து ஒரு வாரம் வியாபாரம் செய்து பாருங்கள்.. வார முடிவில் எவ்வளவு  லாபம் அல்லது  நஷ்டம் என்று பாருங்கள். நஷ்டம் வந்தால் நீங்கள் வியாபாரத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். மீண்டும் ஒரு வாரம்  புத்தகத்திலேயே  கற்பனை வியாபாரம்  செய்யுங்கள்.லாபம் வரும் என்று நிச்சயம் தெரிந்த பின் வியாபாரத்தை  தொடங்குங்கள்.

இனி வியாபாரம் எப்படி செய்வது  என்று பார்ப்போம்.:
1)பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்க்கும்..Intra day , வாங்கி வைத்து விட்டு நல்லவிலை வந்ததும் விற்க்கும் வகைDelivery என்று இரண்டு விதமாக செய்யலாம்.
 2)எந்தவிதமான துறை   பங்குகள் என்பதை  முதலில்
தேர்வு செய்யுங்கள்.

3)அனைத்து  கம்பெனிகளின்  பங்குகளிலும் காலை வைத்து விட்டு முழிப்பதை  விட ஒவ்வொரு துறைக்கும் இரண்டு அல்லது 3 முக்கிய பங்குகள் தேர்வு செய்து மொத்தம் 10 இல் இருந்து 15 பங்குகலில் மட்டும் வியாபாரம் செய்யுங்கள்.

4)தேர்வு செய்யப் பட்ட அந்த கம்பெனிகளின்   3 ஆண்டு லாப நஷ்டக்  கணக்கு
மற்றும் காலாண்டு லாப  நஷ்ட கணக்கை பாருங்கள். டிவிடெண்ட்  கொடுத்தது எவ்வளவு என்று பாருங்கள். கம்பெனியின் வருங்கால திட்டத்தை  பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

5)கம்பெனியின் பங்குகள்  52 வார  அதிக பட்ச விலையை எட்டி உள்ளதா என்று கவனிக்கவும்..

6)தற்போது அனைத்து  புரோக்கர்கள் தரும் சாப்ட்வேர்  களிலும்  (technical Analysis)
  கொடுத்துள்ளதால் அந்த வகையில் உங்களுக்கு சிரமம் குறைவு.
ஆனால் முக்கியமான சில வார்த்தைகளும் அது என்ன என்பதும் நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

7)பங்கின் மைய விலை (Pivot Point)நகரும் சராசரி விலை(Moving average), நஷ்டத்தை நிறுத்தும் விலை(Stop Loss)தடுப்பு விலை(Resisistance Level )ஆதரவு விலை   (Support Level)பற்றி அறிந்திருக்க வேண்டும்.

8)மிக முக்கியமானது  வரை படத்தை  வைத்து (Chart)  எப்படி ஆய்வு செய்து முடிவெடுப்பது..

இந்த பதிவில் சுருக்கமாக  பங்கு வர்த்தகத்தின் அடிப்படை  விஷயங்களை கூறியுள்ளேன். . அடுத்தா பதிவில் இவற்றை பற்றி விரிவாக விளக்குகிறேன்.

No comments:

Post a Comment