Sunday, August 24, 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியமிக்க பட வேண்டும். :கட்ஜு

          உச்ச நீதி மன்றத்திற்க்கு தலைமை  நீதிபதியை  தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்க வேண்டும். பணி மூப்பை  (Seniority ) வைத்து கூடாது. முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி  மார்கண்டேய கட்ஜு.
வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு நல்ல  யோசனை என்றே தோன்றுகிறது.     இதன்     உள் கருத்து   என்னவென்று பார்ப்போம்.

         வரும்  நவம்பர் மாதம்  தற்போதைய  உச்ச  நீதி மன்ற நீதிபதி ஒய்வு பெறுகிறார். ஒய்வு பெற்ற  நீதிபதியின் இடத்தில்    தற்போதைய  உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் அதிகம்  அநுபவம்  உள்ளவரை  நியமிப்பது வழக்கம்
திரு. கட்ஜுவின் .வார்த்தைகளை கவனிக்கும் போது தற்போது  உள்ள அனுபவம் மிக்க உச்ச  நீதி மன்ற  நீதிபதி  அந்த  பதவிக்கு தகுதியானவர் அல்ல என்பது போல் உள்ளது. இது இது தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகளை அசிங்க படுத்துவது போல் உள்ளது.

         திரு. கட்ஜு  இதையே  மாவட்ட நீதிபதிகளை  மாநில அரசுகள்  தேர்ந்தேர்ந்தேடுக்கும்   போதும் , உயர் நீதி மன்ற நீதிபதிகளை தேர்ந்தேடுக்கும் போதும் தகுதிக்கு முன்னுரிமை  தர வேண்டும் என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். உச்ச நீதி மன்றத்தில் பல் லாண்டு காலம் இருந்து  செயல் பட்ட  உச்ச நீதி மன்ற நீதிபதிகளை காட்டி இவர் சொல்லும் போது நமக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீதே இப்போழுது சந்தேகம் வருகிறது.

        கடைசியாய் ஒரு சந்தேகம் திரு மார்கண்டேய கட்ஜு தகுதியின் அடிப்படையில்  உச்ச நீதி மன்றத்திற்க்கு நீதிபதியாய்    வந்தாரா? அல்லது   திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற நீதிபதியாய்  ஆனாரா??


No comments:

Post a Comment