Saturday, August 23, 2014

பாக். தாக்குதலும் பார்ட் டைம் ராணுவ அமைச்சர் கண்டனமும்.

R .S .புரம்  பகுதியில்  பாக் .  ராணுவத்தினர் தொடர் தாக்குதல். 22  இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இது வரை இருவர் கொல்ல  பட்டுள்ளனர். 7 பேர் காயப் பட்டுள்ளனர்.  3 கிராமங்களை சேர்ந்த 2000 பேர்  வீட்டையும் உடமைகளையும் ,கால்நடைகளையும் விட்டு  விட்டு
அகதிகளாய் இது வரை வெளியேறியுள்ளனர்..

இந்திய  ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி இருந்தால் பாக். பக்கம் ஏற்பட்ட சேதத்தை சொல்லலாமே.??ஒரு நாட்டு  மக்களை பக்கத்து நாட்டுக்காரன்
தாக்கி  விரட்டி அடித்து கொண்டிருக்கின்றான் . ராணுவ அமைச்சர் அமைதி காக்கிறார் . பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அதில் பாக்கின் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என்று  கூறுகிறார்.

இந்தியாவிற்க்கு மோடி  இனியாவது ஒரு முழு நேர  ராணுவ  அமைச்சரை
நியமிப்பாரா? அல்லது இனியும்  பார்ட் டைம் ராணுவ அமைச்சராக  அருண் ஜெட்லியே நீடிப்பாரா??

பாக். தாக்குதல் என்பது  ஏதோ    பீகாரிகளையும் மற்ற தென் மாநில மக்களையும்  சிவசேனா  தொண்டர்கள் மகாராஸ் டிராவை   விட்டு விரட்டி அடிக்கும் உள் நாட்டு பிரச்சினை அல்ல.  இது  இந்தியாவின்
தன மானத்தை  உலக நாடுகள்  மத்தியில்  கேவல படுத்தும் செயல். மத்திய
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா???

No comments:

Post a Comment