Monday, August 25, 2014

சட்ட மன்ற தேர்தலில் பாஜக வின் தோல்விக்கு எது காரணம்.??

தேர்தலில்  வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை   பிடித்தால் அதன் தாக்கம் ஒரு 6 மாதத்திற்க்கு இருக்கும். இதை அரசியல் விமர்சகர்கள் ஹனிமூன் பீரியட்  என்று கூட சொல்வார்கள்.
ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் எந்த சிக்கலிலும் மாட்டாமல் இந்த  கால கட்டத்தில் இருப்பார்கள். அப்படியே  தவறு செய்தாலும் அநுபவம்  இன்மை என்ற  காரணத்தால் அந்த தவறுகள்  மன்னிக்க படும்.

சமீபத்தில் பாஜக வின்  அசுர வெற்றியும் அப்படிதான் அமைந்தது. காங்கிரஸ் எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல்  நிற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இது வரை நடந்த 21    சட்டசபை இடை தேர்தல் முடிவுகள்  நிச்சயம்
பாஜக வின் வெற்றிக்கு  ஒரு அதிர்ச்சி தரும்  முடிவு தான். முதலில் வந்தது

சட்டிஸ்கர்  மாநில  முடிவு. 3 சட்டசபை தொகுதியிலும்  காங்கிரஸ் வெற்றி பெற்று  பாஜகவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது. இன்று  4 மாநில
முடிவுகள் பீகாரில்  4 இல் மட்டுமே ,கர்நாடகாவில் 1,ம.பி.2 பஞ்சாப்பில்  அகாலி 1 ஆக  18 சட்டமன்ற தொகுதிகளில் 8 இல் மட்டுமே  வெற்றி.

பிரமாண்டமான வெற்றிக்கு பின் என் இந்த சறுக்கல் ??
1)காங்கிரஸ் அப்படி ஒன்றும் இந்த இடை பட்ட காலத்தில்  எதிர்
எதிர்கட்சியாய்  இருந்து சாதித்தது விடவில்லை. பின் என் இந்த  தோல்வி.??

2)மோடி என்னும் மாயை நீங்கி விட்டதா?

3)அல்லது மக்கள் காங்கிரசிற்கும் பாஜாகாவிற்க்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று  கண்டு கொண்டு விட்டார்களா??

4)அல்லது பாஜாகாவின் இமாலய வெற்றிக்கு   காங்கிரஸ் மீது இருந்த  அதிருப்தி தானே தவிர  வேறு ஒன்றும் இல்லையா?

5)அல்லது கசப்பு மருந்து தருகிறேன் என்று  காங்கிரசின் கொள்கைகளை அப்படியே பின்  பற்றி டீசல் பெட்  ரோல்  விலை ,ரயில் கட்டண விலை
என்று உயர்த்தியதில் மக்கள் கடுப்படைந்து  விட்டனரா??

6)அல்லது  கருப்பு பண முதலைகளை கண்டு பிடித்து சிறை வைப்போம் ,
ஸ்விஸ் வங்கி பணத்தை உடன் இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று சொல்லி விட்டு   ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணமே இல்லை என்று
சொன்னதால் கோபப் பட்டு விட்டனரா??

7)அல்லது இந்திய வீரர்களை கொன்றால்  பதிலுக்கு  பாக். ராணுவத்திற்கு இரு
மடங்காக பதிலடி கொடுப்போம் என்று சவால் விட்டு விட்டு இன்று  வெறும் கண்டன அறிக்கை மட்டும் விட்டு கொண்டு   இருப்பதாலா??

8) அல்லது ஆட்சி  பொறுப்பேற்று 100 நாட்களில் பாக். 70 முறை எல்லை
தாண்டி தாக்குதல் நடத்தியும்   பிரதமர் அமைதி காப்பதை கண்ட வெறுப்பினாலா??

9)ஊழல் செய்த  காங்கிரஸ்காரர்களை சிறையில்  வைப்போம்  என்று  பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் ஊழல் புகார்களை அடுக்கியவர்கள், ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் ஒரு காங்கிரஸ்காரனையும் சிறையில் வைக்காமல்   ஆட்சி நடத்துவது ஏன்  என்பது புரியாததாலா??

புரியாத புதிர். பாஜக விளக்குமா?

Sunday, August 24, 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியமிக்க பட வேண்டும். :கட்ஜு

          உச்ச நீதி மன்றத்திற்க்கு தலைமை  நீதிபதியை  தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்க வேண்டும். பணி மூப்பை  (Seniority ) வைத்து கூடாது. முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி  மார்கண்டேய கட்ஜு.
வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு நல்ல  யோசனை என்றே தோன்றுகிறது.     இதன்     உள் கருத்து   என்னவென்று பார்ப்போம்.

         வரும்  நவம்பர் மாதம்  தற்போதைய  உச்ச  நீதி மன்ற நீதிபதி ஒய்வு பெறுகிறார். ஒய்வு பெற்ற  நீதிபதியின் இடத்தில்    தற்போதைய  உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் அதிகம்  அநுபவம்  உள்ளவரை  நியமிப்பது வழக்கம்
திரு. கட்ஜுவின் .வார்த்தைகளை கவனிக்கும் போது தற்போது  உள்ள அனுபவம் மிக்க உச்ச  நீதி மன்ற  நீதிபதி  அந்த  பதவிக்கு தகுதியானவர் அல்ல என்பது போல் உள்ளது. இது இது தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகளை அசிங்க படுத்துவது போல் உள்ளது.

         திரு. கட்ஜு  இதையே  மாவட்ட நீதிபதிகளை  மாநில அரசுகள்  தேர்ந்தேர்ந்தேடுக்கும்   போதும் , உயர் நீதி மன்ற நீதிபதிகளை தேர்ந்தேடுக்கும் போதும் தகுதிக்கு முன்னுரிமை  தர வேண்டும் என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். உச்ச நீதி மன்றத்தில் பல் லாண்டு காலம் இருந்து  செயல் பட்ட  உச்ச நீதி மன்ற நீதிபதிகளை காட்டி இவர் சொல்லும் போது நமக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீதே இப்போழுது சந்தேகம் வருகிறது.

        கடைசியாய் ஒரு சந்தேகம் திரு மார்கண்டேய கட்ஜு தகுதியின் அடிப்படையில்  உச்ச நீதி மன்றத்திற்க்கு நீதிபதியாய்    வந்தாரா? அல்லது   திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற நீதிபதியாய்  ஆனாரா??


Saturday, August 23, 2014

பாக். தாக்குதலும் பார்ட் டைம் ராணுவ அமைச்சர் கண்டனமும்.

R .S .புரம்  பகுதியில்  பாக் .  ராணுவத்தினர் தொடர் தாக்குதல். 22  இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இது வரை இருவர் கொல்ல  பட்டுள்ளனர். 7 பேர் காயப் பட்டுள்ளனர்.  3 கிராமங்களை சேர்ந்த 2000 பேர்  வீட்டையும் உடமைகளையும் ,கால்நடைகளையும் விட்டு  விட்டு
அகதிகளாய் இது வரை வெளியேறியுள்ளனர்..

இந்திய  ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி இருந்தால் பாக். பக்கம் ஏற்பட்ட சேதத்தை சொல்லலாமே.??ஒரு நாட்டு  மக்களை பக்கத்து நாட்டுக்காரன்
தாக்கி  விரட்டி அடித்து கொண்டிருக்கின்றான் . ராணுவ அமைச்சர் அமைதி காக்கிறார் . பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அதில் பாக்கின் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என்று  கூறுகிறார்.

இந்தியாவிற்க்கு மோடி  இனியாவது ஒரு முழு நேர  ராணுவ  அமைச்சரை
நியமிப்பாரா? அல்லது இனியும்  பார்ட் டைம் ராணுவ அமைச்சராக  அருண் ஜெட்லியே நீடிப்பாரா??

பாக். தாக்குதல் என்பது  ஏதோ    பீகாரிகளையும் மற்ற தென் மாநில மக்களையும்  சிவசேனா  தொண்டர்கள் மகாராஸ் டிராவை   விட்டு விரட்டி அடிக்கும் உள் நாட்டு பிரச்சினை அல்ல.  இது  இந்தியாவின்
தன மானத்தை  உலக நாடுகள்  மத்தியில்  கேவல படுத்தும் செயல். மத்திய
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா???

Tuesday, August 12, 2014

பங்கு வர்த்தகம் லாபமான தொழிலா?? பகுதி -2

முதல் பதிவில்  பங்கு வர்த்தகத்தில்   சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சுருக்கமாக கூறி இருந்தேன். இந்த பதிவில்   அவற்றை  பற்றி  விளக்கமாக கூறியுள்ளேன்.
புரேக்கரேஜ் :  :பொதுவாக இன்ட்ர  டே(Intra day)   வியாபரத்திற்கு ஒரு
விதமாகவும் (Delivery)டெலிவரிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமாகவும்  புரோக்கர் கம்பெனிகள்  நம்மிடம் சாஜ்  செய்கின்றன.
HDFC,, ICICI போன்ற  வங்கிகள்   இன்டிரா  டே க்கு 50 ரூபாய்  வசூலிப்பார்கள்.
டெலிவரிக்கு0.50 % சார்ஜ் செய்வார்கள்.
ஆனால் தனியார் புரோக்கர்கள்  குறிப்பிட்ட புரோக்கரேஜ் சொல்வார்கள். ஆனால் நாம் பேரம் பேசினால்  குறைத்து வசூலிப்பார்கள்.
உ.ம். தனியார்  கம்பெனிகளிடம் பேரம் பேசி  இன்டிரா டே க்கு .03% வரை வாங்கலாம்.. டெலிவரிக்கு  0.25% வரை பேரம் பேசலாம். தனியார் கம்பெனி மூலம் செய்வதால் நாம்  செய்யும்  வியாபாரத்திற்கு   குறைந்த  லாபம் இருந்தாலும்   வெளியே வர வழி  வழிஉண்டு..நீங்கள் உங்களுக்கு  சேவை செய்ய சிறந்த புரோக்கரையே தேர்ந்தெடுங்கள். இந்தியாவின் முதல் 10  ஷேர் புரோக்கர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள். புதிய கம்பெனிகள் பல குறைந்த புரோக்கர் கமிஷன் வாங்குவார்கள். ஆனால் சேவை சரியாய் இருக்காது சாப்ட்வேர் நன்றாய் இருக்காது.  கீழே  எனக்கு தெரிந்த பிரபலமான 3  புரோக்கர் கம்பெனிகள் பெயர் கொடுத்துள்ளேன்.
Sharkhan,Angel Broking,Motilal Oswal
.
அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது சார்ட்   நமக்கு பங்குக்கள் வாங்குவதில் எப்படி உதவும் என்பது.

பங்குகளின் விலை உயரும் போது  (Chart) சார்ட் ஏறுமுகமாகவும்,இறங்கும் போது  (Chart)சார்ட் இறங்கு முகமாகவும் காட்டும்.. இதை கண்டு பிடிப்பதில் சிரமம் இல்லை.  மார்கெட்டில் அனைத்து பங்குகளும் ஏறும் மற்றும் இறங்கும் போது   (Niffty) நிப்டி மற்றும்  (BSE)பி எஸ் இ  சார்ட் களும் ஏறவோ அல்லது இறங்குவதகவே காட்டும். ஆகையால் தனிப் பட்ட பங்குகள்  ஏறுமுகமாக இருப்பதை பார்ப்பதை தவிர்த்து விட்டு ,முதலில் பங்கு சந்தை அன்றைய தினம் ஏறுமுகமாக உள்ளதா என்று பாருங்கள். (Chart) சார்ட் ஏறுமுகமாக காண்பித்தால்   நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும்  பங்குகள் ஏறு முகமாக உள்ளதா? அந்த செக்டார்(Sector) அன்று ஏறுமுகமாக உள்ளதா  போன்ற அனைத்தையும் கவனியுங்கள். அதன் பின் அந்த பங்கு தன்னுடைய நகரும்  சராசரிக்கு (Moving Average)மேல் உயர்ந்துள்ளதா என்பதை கவனியுங்கள். பங்குகள் (Moving average)நகரும் சராசரியை தாண்டி நின்றால் நிச்சயம் சந்தை உயரும் போது அந்த பங்கின் விலையும் . உயரும்.

மேலே  கொடுத்துள்ளது பாரத மிகு மின் நிறுவன  பங்கின் இன்றைய  சார்ட்.
காலையில் சரிந்த பங்கின் விலை   பங்கின் சப்போர்ட் விலையான  219.20 வந்ததும் அதற்க்கு கீழ் இறங்கவில்லை என்பதை கவனியுங்கள். அதே போல்  மார்கெட் உயர்ந்த போது  பங்கின் விலையும் உயர்ந்தது. ஆனால்  ரெசிஸ்டன்ஸ் லெவல் 1  வந்த உடன் 224.45 இல் அது இறங்க ஆரம்பித்து விட்டது என்பதையும் கவனியுங்கள்.

பங்கை வாங்கும் போது அன்றை பங்கின் நிலை  பற்றி மட்டும் பார்க்காமல் கடந்த 5 நாள் ஏற்றம் இறக்கம் எப்படி உள்ளது,மற்றும் ஓராண்டில் அந்த பாங்கு எவ்வளவு உயர்ந்துள்ளது.  என்பதையும் பார்க்க வேண்டும். பங்கு தன்னுடைய
அதிக பட்ச விளையியாடைந்து விட்டு இறங்குமுகமாக இருந்தாலும் நீண்ட கால முதலிட்டுக்கு ஏற்ற பங்கு அல்ல என்பதை அறிக.
.
பங்கையும் தேர்வு செய்து விட்டீர்கள். இப்போழுது  அந்த பங்கின் (Resistance  Level)ரெசிஸ்டன்ஸ்  லெவல் எங்கு உள்ளது, சப்போர்ட் லெவல் (Support level) எங்கு உள்ளது என்பதை கவனியுங்கள். நீங்கள் வாங்கும் விலையில் இருந்து  அதிக விலையில் (Resistance level)ரெசிஸ்டன்ஸ் லெவல் இருந்தால் பங்கு நன்கு உயர  வாய்ப்பு உள்ளது. ரெசிஸ்டன்ஸ் லெவல் அருகில் இருந்தால் அந்த விலை வந்ததும் பங்கு மேலே ஏற சிரம படலாம் அல்லது  அந்த விலையில் இருந்து சரியவும் வாய்ப்பு உண்டு. அதே போல் ( Support level) சப்போர்ட் லெவல் உங்களுக்கு தெரிவிப்பது அந்த விலைக்கு கீழ் பங்கு செல்ல சற்று  வாய்ப்பு குறைவு. ஆனால் அதற்க்கு கீழ் சென்று விட்டால் மேலும் சரிய
வாய்ப்புண்டு. இப்பொழுது சார்ட்டை பார்த்த உடன் உங்கள் விலை,அது ஏறக் கூடிய விலை, மற்றும் பாது காப்பான சப்போர்ட் லெவல்   உங்களுக்கு தெரியும்.

பங்கை வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல்  வேலை   பங்கின் சப்போர்ட் லெவல் அல்லது  உங்கள் முதலீட்டுக்கு ஏற்றவாறு உங்களால் தாங்க கூடிய நஷ்டத்தை கணக்கிட்டு  ஸ்டாப் லாஸ்(Stop loss)    போட வேண்டும். இப்படி செய்வதால் பங்கு சந்தை திடீர் என்று சரிந்தாலும் உங்களுடைய  நஷ்டத்தின் அளவு குறிப்பிட்ட அளவை தாண்டாது. உ.ம். 100 ரூபாய் விலையுள்ள ஒரு பங்கை  வாங்குகிறீர்கள்.  பங்கின் விலை குறைந்தால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கிட்டு 98 அலது 97 இல்
ஸ்டாப் லாஸ் போட்டு விட்டால் பங்கின் விலை திடீர் என்று சரிந்தாலும்  உங்கள் நஷ்டம் 200 இல் 300 ரூபாய்க்குள்தான். ஸ்டாப் லாஸ் என்ன  விலையில் போடலாம் என்பதை கண்டு பிடிக்க தற்போது கம்பெனிகள் அதற்குண்டான்  கணக்கையும்  போட்டே   இப்போழுது கொடுத்து விடுகின்றன. ஆகையால் பங்கு வாங்கிய உடன் ஸ்டாப் லாஸ் போட மறக்காதீர்கள்.

Friday, August 8, 2014

பங்கு வர்த்தகம் லாபமான தொழிலா??

பங்கு சந்தை என்றவுடன் பொதுவாக நம் மனதில் தோன்றுவது   இது  கிட்ட
தட்ட சூதாட்டம் போன்றது. .பங்கு சந்தையில்  முதலீடு செய்து  முன்னேறியவர்கள் யாரும் இல்லை.. மிகவும் ரிஸ்க்   ஆனா வியாபாரம்.
உண்மையில் அந்த அளவு  மிக மோசமான வியாபாரமா? ஒரு பார்வை.

எந்த ஒரு வியாபாரமாய் இருந்தாலும் முதலில் அதை    நன்கு தெரிந்து கொண்டு இறங்கினால் மட்டுமே  லாபம் கிடைக்கும்.  துரதிர்ஷ்டவசமாக  பங்கு வர்த்தகத்தில் நுழையும் 90% பேர்  பங்கு வர்த்தகம் பற்றி அடிப் படை   விஷயம் கூட தெரியாமல் இறங்குவது தான் தோல்விக்கு காரணம். முன் பின் தெரியாத  ஒரு  ஷேர் ப்ரோக்கிங் கம்பெனியின்  பிரதிநிதி ஆசை வார்த்தை காட்டி சேர்த்து விட்டு சென்று விடுகிறான் . தினசரி வாங்க வேண்டிய பங்குகள் பற்றி (Tips) தகவல் தருவோம். இவ்வளவு முதலீடு போட்டல் பேங்க் வட்டியை விட 10மடங்கு லாபம் கிடைக்கும் என்று புள்ளி விவரம்  கொடுப்பான். இவர்களும் ஆசை பட்டு இறங்கி  விட்டு,  பின் போட்ட பணம் அத்தனையும் போய் விட்டது என்று 3 மாதத்திலேயே  தலையில் கை வைத்து கொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். நிச்சயம் பேங்க் வட்டியை விட கூட கிடைக்கும் ஆனால் வியாபாரம் ஆரம்பிக்கு முன் அதை பற்றி முழுவதும் தெரியாமல் இறங்கி விட்டு வியாபாரம் சரியில்லை என்று கூறுவது எந்த விதத்தில்  நியாயம்.??
பங்கு  வர்த்தகத்தில் இறங்கும் முன் கவனிக்க வேண்டியவை:

1)மிக  மிக குறைந்த வியாபார முதலீடு 10,000 வது இருந்தால் தான்  ஒரளவு லாபம் சம்பாதிக்க  முடியும்..
2)பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்த நண்பர்களிடமோ அல்லது புரோக்கர் அலுவலகத்தில் இருந்து வரும்  விற்பனை  பிரதிநிதியுடனோ விவாதித்து அறிந்து கொள்ளுங்கள்.
3)ஆங்கில சேனல்கள்(Bloomberg, ND TV Profit, ET Now போன்றவற்றை குறைந்த பட்சம் தினம் 1 மணி நேரம்  பாருங்கள்.
4)Money control,Money rediff.com.,Niffty 50 Heat map.தினம் பாருங்கள்.

இனி  நீங்கள் வியாபாரம்  தொடங்கு முன் கவனிக்க வேண்டியவை  ::
1)சிறந்த புரோக்கர் யார் என்று விசாரியுங்கள்.
2)புரோக்கரேஜ் கமிஷன்  பேரம் பேசி வாங்குங்கள்.
3)கம்பெனி கொடுக்கும் சாப்ட்வேர்  எப்படி  உபயோகப் படுத்துவது  என்று  நன்கு   தெரிந்து கொள்ளுங்கள்.
4)பணத்தை வைத்து வியாபாரம் செய்யுமுன் நீங்களே  எந்த பங்கில் எந்த விலையில் போடலாம் என்று முடிவெடுத்து  ஒரு நோட்டில்  குறித்து வைத்து ஒரு வாரம் வியாபாரம் செய்து பாருங்கள்.. வார முடிவில் எவ்வளவு  லாபம் அல்லது  நஷ்டம் என்று பாருங்கள். நஷ்டம் வந்தால் நீங்கள் வியாபாரத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். மீண்டும் ஒரு வாரம்  புத்தகத்திலேயே  கற்பனை வியாபாரம்  செய்யுங்கள்.லாபம் வரும் என்று நிச்சயம் தெரிந்த பின் வியாபாரத்தை  தொடங்குங்கள்.

இனி வியாபாரம் எப்படி செய்வது  என்று பார்ப்போம்.:
1)பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்க்கும்..Intra day , வாங்கி வைத்து விட்டு நல்லவிலை வந்ததும் விற்க்கும் வகைDelivery என்று இரண்டு விதமாக செய்யலாம்.
 2)எந்தவிதமான துறை   பங்குகள் என்பதை  முதலில்
தேர்வு செய்யுங்கள்.

3)அனைத்து  கம்பெனிகளின்  பங்குகளிலும் காலை வைத்து விட்டு முழிப்பதை  விட ஒவ்வொரு துறைக்கும் இரண்டு அல்லது 3 முக்கிய பங்குகள் தேர்வு செய்து மொத்தம் 10 இல் இருந்து 15 பங்குகலில் மட்டும் வியாபாரம் செய்யுங்கள்.

4)தேர்வு செய்யப் பட்ட அந்த கம்பெனிகளின்   3 ஆண்டு லாப நஷ்டக்  கணக்கு
மற்றும் காலாண்டு லாப  நஷ்ட கணக்கை பாருங்கள். டிவிடெண்ட்  கொடுத்தது எவ்வளவு என்று பாருங்கள். கம்பெனியின் வருங்கால திட்டத்தை  பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

5)கம்பெனியின் பங்குகள்  52 வார  அதிக பட்ச விலையை எட்டி உள்ளதா என்று கவனிக்கவும்..

6)தற்போது அனைத்து  புரோக்கர்கள் தரும் சாப்ட்வேர்  களிலும்  (technical Analysis)
  கொடுத்துள்ளதால் அந்த வகையில் உங்களுக்கு சிரமம் குறைவு.
ஆனால் முக்கியமான சில வார்த்தைகளும் அது என்ன என்பதும் நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

7)பங்கின் மைய விலை (Pivot Point)நகரும் சராசரி விலை(Moving average), நஷ்டத்தை நிறுத்தும் விலை(Stop Loss)தடுப்பு விலை(Resisistance Level )ஆதரவு விலை   (Support Level)பற்றி அறிந்திருக்க வேண்டும்.

8)மிக முக்கியமானது  வரை படத்தை  வைத்து (Chart)  எப்படி ஆய்வு செய்து முடிவெடுப்பது..

இந்த பதிவில் சுருக்கமாக  பங்கு வர்த்தகத்தின் அடிப்படை  விஷயங்களை கூறியுள்ளேன். . அடுத்தா பதிவில் இவற்றை பற்றி விரிவாக விளக்குகிறேன்.