Saturday, August 25, 2018

தடைகள் மக்களுக்கு மட்டும்.. அரசுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இல்லை ????

                                                     காலை  உணவுக்கு  வீட்டில்   மாவு  வாங்கி  வரச்  சொன்னார்கள்.   எப்பொழுதும்  போல்   நானும்  மாவு  அரைக்கும் கடைக்கு  சென்றேன் . கடைக்காரர் இனிமேல்  பாத்திரம்  கொண்டு  வரவேண்டும்   பிளாஸ்டிக்  பைகள்  தடை   செய்ய பட்டு விட்டன  என்றார் .

புரியாத  புதிர்   பிளாஸ்டிக்   பைகள்  தயாரிக்கும் கம்பெனிகள் தொடங்க அரசு அனுமதிக்கின்றது. வங்கிகள் கடன் கொடுக்கின்றன. வியாபாரிகள் கடைகளில் விற்கவும் செய்கிறார்கள்.  ஆனால்  உபயோகிக்கும் சாமானியனுக்கு மட்டும் தடை ஏன்.? பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய  தடை செய்தாலே போதுமே!!!

இதே கதைதான்  மது பாணக் கம்பெனிகள்  விஷயத்திலும், 9000 கோடி வரை வங்கியை ஏமாற்றி விட்டு ஒருவன் ஒடி விடுகிறான் .. அவனை சிறையில் தங்க வைக்க வசதி எப்படி செய்து   தருகிறோம் என்று 8 நிமிட  வீடியோவை  மத்திய  அரசு இங்கிலாந்து நீதி மன்றத்திற்க்கு   படம் எடுத்து அனுப்புகிறது.
மது தயாரிக்க அரசு உரிமம் தருகிறது அரசு வங்கிகளும் மனம் போல் கடன் தருகிறது.அரசே  தமிழகத்தில் விற்பனையும் செய்கிறது.  ஆனால் குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரமும் அரசே செய்கிறது.  இதே கதைதான்  புகையிலை மற்றும் சிகரெட்  விஷயத்திலும்..

ஏனிந்த   இரட்டை வேஷம்??????





No comments:

Post a Comment