Tuesday, September 11, 2018

பாஜாகாவிற்க்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தர வேண்டுமா??

ராமருக்கு கோயில்  கட்ட  வேண்டும், ராம ராஜ்யத்தை  கொண்டு வர வேண்டும் ,.  1990 இல்  அத்வானி.


ஊழலை  ஒழிக்க  போகிறோம்.  மக்கள் அனைவருக்கும்  15 லட்சம் . கறுப்புப்  பணத்தை  ஒழித்துக்  காட்டுவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு  வேலை வாய்ப்பு .   60 ஆண்டுகள்  காங்கிரசிற்கு  கொடுத்தீர்கள்  60 மாதம் எனக்கு கொடுங்கள் .2014 இல்  மோடி 

ஊழல்  காங்கிரசிற்கு  ஒட்டு போடாதீர்கள்.  எதிர் கட்சிகளின் கூட்டணி
சந்தர்ப்ப வாத   கூட்டணி . எதிர் கட்சிகளுக்கு தலைமை தாங்க  தலைவர்கள் இல்லை ,ராகுல்  காந்தி தலைமை பதவிக்கு ஏற்றவரல்ல   2018 இல்  மீண்டும்
மோடி. .கூறுகிறார்.

கொடுத்த  60 மாதங்களில் 54 மாதங்கள் முடிந்து விட்டன . இன்னும் சாதனை என்று சொல்லுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லையே !!!! மீண்டும்  பழைய  பல்லவியையே  பாடுகிறார் மோடி.

வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிக்கு  விலை பொருளுக்கு ஏற்ற விலை இல்லை . பண மதிப்பு குறைப்பு சட்டத்தின் மூலம் சாமான்ய மக்கள்   நடுத் தெருவில்    வரிசையில் நின்றனர். 100 க்கும் மேற் பட்ட வயதானவர்கள் உயிரிழந்தனர். ரூ 3.50 இருந்த காலால் வரியை ரூ  19.00 க்கு  உயர்த்தினிர்கள்
பெட்ரோல்  விலை  உயர்ந்துள்ளது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு   சரிந்து விட்டது. 

கொடுத்த 60  மாதத்தில்  6 மாதங்கள்  வெளி நாடு சுற்றுப் பயணம் செய்தீர்கள் .

மீண்டும்  ஒரு முறை வாய்ப்பு தர வேண்டுமா?????????????
முடிவு மக்கள் கையில்.!!!!!!!

No comments:

Post a Comment