Saturday, October 5, 2013

தமிழகத்தில் ஊடுருவும் மத தீவிரவாதம். ஒரு பார்வை.

மத சார்பின்மை கொள்கை உடையவன்  நான்.ஆனால் எனக்கும்  ஒரு சிறு சந்தேகம் உண்டு..குஜராத்தில் கலவரம் நடந்தது  2002 இல் .அதன் பின் முஸ்லீம்கள்  குஜ்ராத்தில் தீவிரவாதத்தில்   ஈடு பட்டதாக எந்த  செய்தியும் இல்லை. ஆனால்  குஜராத்தில் நடந்த பயங்கரத்திற்க்கு பலி வாங்குகிறேன் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம்களில் ஒரு சிலர் தீவிரவாதத்தில்  ஈடு படுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்
 நாங்கள் பாதிக்கப் பட்டோம்  அதற்க்கு பதிலடிகொடுக்கிறோம் என்ற பதில் கிடைக்கிறது.

 பயங்கரவாதத்திற்க்கு பதில் பயங்கரவாதம்தான் என்றால் உங்கள் தீவிரவாதத்தை  குஜராத்திற்க்கு சென்று செய்யலாமே. ஏன் தமிழகத்தில் ஊடுருவுகிறீர்கள்.உங்களின் செய்கையால் அமைதி பூங்காவாவாய் இருக்கும் தமிழகத்திலும் இந்துத்வா நுழைய வாய்ப்பை கொடுக்கின்றீர்கள். விளைவு  இன்னும் சிறிது காலம் இப்படியே போனால் தீவிரவாதத்திற்க்கு தீவிரவாதம்தான் பதிலாக கிடைக்கும்.

எந்த ஒரு முஸ்லீம் நாட்டிலும் கிடைக்காத மரியாதை முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது. இந்திய தலைவர்கள் முஸ்லீம்களின் மைனாரிட்டி ஒட்டை பெறுவதற்க்காகவே  பல விதங்களில் நாடாக மாடுகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் இந்து பண்டிகைகளை கிண்டல் செய்யும் கழக பகுத்தறிவு வாதிகள் நோம்பு காலங்களிலும், இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் தரும் மரியாதையே அலாதி.!! இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அளிக்காத கொடுமையா ?? முஸ்லீம்களுக்கு இழைக்கப் பட்டு விட்டது.

  ஒவ்வொருவரும்  மத தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால்  இந்திய   மத சார்பின்மை கொள்கையில் இருந்து விலக நேரிடும் அபாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டேன் . ஒரிருவர்  இதை சரியாக புரிந்து கொண்டாலும்  எனக்கு திருப்தியே.

No comments:

Post a Comment