Monday, October 7, 2013

எல்லை தாண்டிய பயங்கர வாதம். மத்திய அரசின் நடவடிக்கை சரியானதுதானா?

எல்லைப் பகுதிகள் தீவிரவாதிகள் தாக்குதல்..கார்கில் போன்ற நிலை நிலவுகிறது. துணிச்சலான நடவடிக்கை எடுக்கவேண்டும்.பதிலுக்கு பதில். தாக்குதல் நடத்த வேண்டிய நேரத்தில்  சமாதானம்   பேசுகிறது. இந்தியா  செரிஃபுடன் பேச்சு வார்த்தை வேண்டாத ஒன்று.. இது இந்தியாவின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை மத்திய அரசின் இந்த செயலால்  கேலிக் கூத்தாகிறது. இத்தனையும் இன்று  தனியார்  தொலைக் காட்சியில்  பஜக தலைவராலும்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் பர்கா  வாலும் சொல்லப் பட்டது. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் அதே எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆனால் சற்றே  அமைதியாய்  இருந்து  யோசிக்க ஆரம்பித்தால்  எழும் கேள்விகள். 1) அடிக்கு அடி ரத்தத்துக்கு ரத்தம் என்பது பக்கத்து வீட்டுக் காரனிடம் சண்டை போடுபவர்கள் வேண்டுமானால்  செய்யலாம். இரு  அண்டை நாடுகள் அப்படி சண்டை போட முடியாது. குறிப்பாக இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருக்கும் போது.
2)எல்லை தாண்டி பாக்  ராணுவம் வராமல் தீவிரவாதிகளை மட்டுமே   அனுப்பி வருகிறது. பாக்  ராணுவம் எல்லை தாண்டி நுழைந்தால் போரிடலாம். இந்திய ராணுவம் பாக் எல்லைக்குள் புகுந்து  தீவிர வாதிகளை விரட்டி அடிப்பது என்பது  முறையற்ற செயல். அது இரு நாடுகளுக்கிடையே போரைத்தான்  உண்டாக்கும்.
3) இதை கருத்தில் கொண்டுதான் செரிஃபின்  தூதரக அதிகாரிகளுக்கிடையே  பேச்சு வார்த்தை  என்ற   கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்க் மறுத்தார். அது மட்டுமின்றி இதில் சம்பந்தப் பட்ட  ராணுவ தளபதிகளிடையே  பேச்சு வார்த்தை இனி நடக்கட்டும் என்றார். இதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

பஜகவும் அவர்களை ஆதரிக்கும் தனியார் தொலை காட்சிகளும்   எதை எடுத்தாலும் அரசியல் லாபம் பார்க்கும்  வேலையை வெளியுறவுக் கொள்கையிலும்  காட்டாமல் அமைதி காப்பது நலம் என்பது என் கருத்து.

Saturday, October 5, 2013

தமிழகத்தில் ஊடுருவும் மத தீவிரவாதம். ஒரு பார்வை.

மத சார்பின்மை கொள்கை உடையவன்  நான்.ஆனால் எனக்கும்  ஒரு சிறு சந்தேகம் உண்டு..குஜராத்தில் கலவரம் நடந்தது  2002 இல் .அதன் பின் முஸ்லீம்கள்  குஜ்ராத்தில் தீவிரவாதத்தில்   ஈடு பட்டதாக எந்த  செய்தியும் இல்லை. ஆனால்  குஜராத்தில் நடந்த பயங்கரத்திற்க்கு பலி வாங்குகிறேன் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம்களில் ஒரு சிலர் தீவிரவாதத்தில்  ஈடு படுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்
 நாங்கள் பாதிக்கப் பட்டோம்  அதற்க்கு பதிலடிகொடுக்கிறோம் என்ற பதில் கிடைக்கிறது.

 பயங்கரவாதத்திற்க்கு பதில் பயங்கரவாதம்தான் என்றால் உங்கள் தீவிரவாதத்தை  குஜராத்திற்க்கு சென்று செய்யலாமே. ஏன் தமிழகத்தில் ஊடுருவுகிறீர்கள்.உங்களின் செய்கையால் அமைதி பூங்காவாவாய் இருக்கும் தமிழகத்திலும் இந்துத்வா நுழைய வாய்ப்பை கொடுக்கின்றீர்கள். விளைவு  இன்னும் சிறிது காலம் இப்படியே போனால் தீவிரவாதத்திற்க்கு தீவிரவாதம்தான் பதிலாக கிடைக்கும்.

எந்த ஒரு முஸ்லீம் நாட்டிலும் கிடைக்காத மரியாதை முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது. இந்திய தலைவர்கள் முஸ்லீம்களின் மைனாரிட்டி ஒட்டை பெறுவதற்க்காகவே  பல விதங்களில் நாடாக மாடுகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் இந்து பண்டிகைகளை கிண்டல் செய்யும் கழக பகுத்தறிவு வாதிகள் நோம்பு காலங்களிலும், இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் தரும் மரியாதையே அலாதி.!! இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அளிக்காத கொடுமையா ?? முஸ்லீம்களுக்கு இழைக்கப் பட்டு விட்டது.

  ஒவ்வொருவரும்  மத தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால்  இந்திய   மத சார்பின்மை கொள்கையில் இருந்து விலக நேரிடும் அபாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டேன் . ஒரிருவர்  இதை சரியாக புரிந்து கொண்டாலும்  எனக்கு திருப்தியே.

Friday, October 4, 2013

மௌன ராகம்- 2

வித்தியாசமான படம் என்று மகன் சொல்ல சென்று பார்த்தேன் "ராஜா ராணி" படம்.. படத்தின் ஆரம்ப முதல்  முடிவு வரை  மௌன  ராகம்   கதை கருவை எடுத்துக் கொண்டு இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏற்றவாறு திரைக் கதை، வசனம்  எழுதியுள்ளனர்.

கதையின் கரு இதுதான். .கதாநாயகன் கதாநாயகி  இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள்.  பெற்றவர்கள் திருப்திக்காக திருமணம் செய்து விட்டு பின் மனம் ஒட்டாமல் இருந்து  கடைசில் இணைவதுதான் கதை. காமெடிக்கு சந்தானம்..இரண்டாவது கதாநாயகியாக வரும் நஸ் ரினா பரவாயில்லை ரகம்.

கார்த்திக் மௌன ராகத்தில் கொடுத்த கலகலப்பை  ஜெய்யினால் தர முடியவில்லை.ரேவதியும் கார்த்திக்கும்  பார்க்கில் இருக்கும் போது ரேவதியின் அப்பா அந்த பக்கம் காபி சாப்பிட வர கார்த்திக் மிஸ்டர் சந்த்ர மௌலி என்று கூப்பிட்டு கலாய்க்கும்  காட்சி  அந்த காலத்தில்  பிரபலமானது. அதே போல்  ரேவதி சிங்க் ஒருவனுக்கு  தமிழ் சொல்லித் தருகிறேன் என்று போடா, டே ,போடா,  போடா மடையா, என்று சொல்லிக்  கொடுப்பதுவும் இன்றும் நினைவில் நிற்கிறது.. இந்த படத்தில்  நயன் தாரா ஜெய்  காமெடி செய்ய முயற்சித்தும் மனதில் நிற்கவில்லை. ஒரே ஒருஆறுதல்  ஆர்யாவின் நடிப்பு  மோகனின் நடிப்பை விட நன்கு இருந்தது..
மௌன ராகம் பார்க்காத இளைய தலைமுறையினர் பார்த்து  ரசிக்க ஒரு படம்.