Wednesday, February 12, 2014

சென்னை சூப்பர் கிங்க் 2014 அணி: ஒரு பார்வை.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு  கொடுக்கும்  முக்கியத்துவம் என்று குறைகிறதோ   அதன் பிறகுதான் மற்ற விளையாட்டுக்கள் முன்னேறும். என்று சொல்லி விட்டு உட்கார்ந்து உட்கார்ந்து  20/20 மேட்சகளையும்   ஐபிஎல் மேட்ச்களையும்  விடாது பார்க்கும் பலரில் நானும் ஒருவன்:.:)
நேற்று  ஐபிஎல்  விளையாட்டு வீரர்கள் ஏலம்  நடந்தது.மற்ற டீம்களைப் பற்றி  அலசுவதற்க்கு முன் .சொந்த மாநில டீமான  சென்னை சூப்பர் கிங் இன்  தேர்வுகளைப் பற்றி ஒரு பார்வை.

 சென்னை சூப்பர் கிங்கின்  சார்பாக ஏலம் கேட்க வந்த பிளேமிங்  ஏல நேரத்தில் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது  கடுப்படித்தது. டீமில் தொடக்க ஆட்டக் காரர்களாய்  இருந்த விஜெய் மற்றும் ஹஸ்சியை   ஏலத்தில் என் எடுக்க வில்லை.? ஏற்கனவே  பந்து வீச்சில் சுமாராக இருந்து கொண்டு  மோசமான பந்து வீச்சால்  சில மேட்ச்களை தோற்ற அனுபவம் இருந்தும்  இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்கள் குறிப்பாக  முகமத் சாமி  4.25, கோடிக்கு போகும் போது ஏன் எடுக்கவில்லை. அதே போல்  உமேஷ் யாதவ்,புவனேஷ் குமார்  வருண் அரூன்  இவர்களையும் சீண்ட வில்லை. அப்படி என்ன அசீஸ்  நெஹ்ரா  ஐபிஎல் இல் சாதித்தார் என்று  அவரை எடுத்தார்கள்..ஆர்.பி. சிங்  ,நேஹ்ராவை விட சிறப்பாகவே முந்தைய  ஐபிஎல்  சீசனில் பந்து  வீசியுள்ளார் . அவர் ஏலமே போகவில்லை காரணாம்?? மிச்சில் ஜான்சன் ,மார்னி  மார்கல்  போன்ற நல்ல வேகப் பந்து வீச்சாளர்களிடம் திணறும் இந்திய அணியின் கேப்டன்  அவர்களை ஏன் சென்னை சூப்பர் கிங்கிற்காக  எடுக்க  விருப்பம் காட்டவில்லை.
1983 இந்தியா  அணியில்  ஆல்  ரவுண்டர்கள் நிறைந்து இருந்தது போல்  இப்பொழுது இந்த  டீமை   உருவாக்க நினைக்கிறார்களா? அன்றை உலக கோப்பை டீமில், 1)ரவி சாஸ்த்திரி,2)ரோகர் பின்னி 3)மதன்லால்  4)மகிந்தர் அமர்நாத்,5)கபில் தேவ  6)கீர்த்தி  ஆசாத்  என்று  ஒரே ஆல் ரவுண்டர் மாயம்.

இன்றைய  சென்னை சூப்பர் கிங்கின் டீமில் இது வரை  உள்ள  வீரர்கள் என்று பார்த்தால்.1)ட்வின்  ஸ்மித் 2)ஜடேஜா  3)பிராவோ  4)ரைனா  இது தவிர அஸ்வினும்  தற்போது  பந்து வீச்சை விட ப்ட்டிங்கில்தான் கவனம் செலுத்துகிறார்..
பந்து வீச்சாளர்கள் என்று பார்த்தால் 1)நெஹ்ரா  2)அஸ்வின்
3)மொஹிட் ஷர்மா  மட்டுமே. இன்றைய  ஏலத்தில் எந்த பந்து வீச்சாளருக்கு குறி வைத்துள்ளனர் .பிளமிங்கிர்க்கே  வெளிச்சம்..
இதுவரைஎடுத்துள்ள அணியை வைத்துப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்கின் அணி  1)ட்வின் ஸ்மித் 2)டு  பிளஸ்சி  3)ரைனா  4)மெக்கல்லம்  5)டோனி  6)பிராவோ  7)ஜடேஜா  8)அஸ்வின்  9)மொஹிட்  ஷர்ம  10)நெஹ்ரா  11)???

Monday, February 10, 2014

இந்திய சரித்திரத்தின் கருப்பு வருடங்கள்:1984 மற்றும் 2002


               இந்திய  நாட்டின் சரித்திரத்தில் அழிக்க முடியாத கருப்பு வருடங்கள்  1984 மற்றும் 2002..ஒன்று  நாட்டின் பிரதமரை கொன்றதற்காக  அவர் கட்சியினர்  செய்த படு கொலை. மற்றது   தீவிரவாத முஸ்லிம் களின்  கொடுமைக்கு பதில் சொல்ல  மாநில அரசின்  ஆதரவுடன் இந்து தீவிர வாத இயக்கங்கள்
செய்த படு கொலைகள் .இரண்டுமே இந்திய மக்களை  அந்நிய நாடுகளுக்கு முன்னால்  தலை குனிய வைத்த  நிகழ்வுகள். பலர் 1984 இல் நடந்தது என்ன ?2002 இல் நடந்தது என்ன என்று  வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில்  என் பங்குக்கு  நான் அறிந்த வரை செய்திகளை பகிர்ந்து கொள்ள  விரும்பியதன் விளைவே இந்த  பதிவு.

சஜ்ஜன் குமார்  சீக்கியர்கள் மீது  நடத்தப் பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த   இவர் ஒரு  காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்.சாட்சிகள் மூலம் இவரது குற்றம் நிருபிக்கப்  பட படவில்லை என்றாலும்   கலவரத்திற்கு  இவரும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று..






மாய கோட்னணி  பாஜக  உறுப்பினர். 95 பேரை முன் நின்று கொன்ற வழக்கில்  இவர் முக்கிய குற்றவாளியாக  தண்டிக்கப் பட்டு  இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் செய்த கொலைக்காக  மோடியால் இவருக்கு  பெண்கள்  மற்றும்  குழந்தைகள்
துறை  வழங்கப்  பட்டதுதான்
வேதனைக்குறியது.



           முதலில்  1984 இல் நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவையும் பார்ப்போம் .அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படு கொலையை தொடர்ந்து ஏற்பட்ட  கலவரம்தான் 1984 கலவரம். .
இந்திரா காந்தியின் கொலைக்கு  காரணம் என்ன? இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள்  தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று போராடிப் பெற்றதை ப் போல  சீக்கியர்களும் தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற எண்ணத் தொடங்கினர்.  இதன் விளைவே  காலிஸ்தான் இயக்கம் என்ற  தீவிர வாத இயக்கம் தோன்றக் காரணமாயிற்று..இவர்களை சமாளிப்பதே பெரிய தலைவலியை மத்திய அரசுக்கு இருந்த போதுதான்  தீவிரவாதிகள்  சீக்கியர்களின் கோயிலான தங்ககோயிலுக்குள்  ஒளிந்து கொண்டு  தீவிரவாத நடவடிக்கையில்  ஈடு பட்ட பொது இந்திய ராணுவம் சீக்கிய தளபதி யின் கீழ்  தங்க கோயிலுக்குள்   அவர்களை அழித்தது..  தங்களின் புனிதமான  கோயிலுக்குள் ராணுவத்தை    அனுப்பியதை  கண்டு கோபமுற்ற சீக்கியர்களின் பதிலடி தான்   30 குண்டுகளால்  இந்திரா காந்தியை  துளைத்த அந்த கோர சம்பவத்தை  நிகழ்த்த காரணமாயிற்று..  இந்திராவின் கோரக் கொலையை கேள்விப் பட்டு காங்கிரஸ் தொண்டர்கள் சீக்கியர்களை தாக்கியதன் விளைவு  3000 க்கும் அதிகமான சீக்கியர்களின் படு கொலைக்கு காரணமாயிற்று..

இந்திய தேசிய காங்கிரஸ்  இதற்காக மன்னிப்பும் வருத்தமும்  தெரிவித்திருந்தாலும் சீக்கியர்களின் கோபம்  நீறு பூத்த நெருப்பைத்தான் இன்னும் இருக்கின்றது. அமைதிக்குப் பின் புயல் என்பது போல்  இனி எப்போதாவது இந்த வெடிக்கும் அபாயமும் உள்ளது. காரணம் காலிஸ்தான் விடுதலை இயக்கம்  என்ற ஒன்று அமைக்கப் பட்டு கடந்த சில வருடங்களாய்  அயல் நாட்டு வாழ இந்தியர்களிடம்  பணம் பெற்று வரும் செய்தி  உலவுகிறது. அந்த இயக்கத்தை ஐரோப்பிய யூனியன்  நாடுகளின் கூட்டணி தடை செய்துள்ளது.

2002  குஜராத் படுகொலை.:-
           முந்தைய படு கொலைக்கும்  இதற்கும் உள்ள வித்தியாசம் இது  இந்திய மக்களை    மதவாரியாக  பிரித்தாழும் செய்கையில் அர்  எஸ்  எஸ்   உம  விஸ்வ ஹிந்து  பரிசத்தும்  இறங்கியதுதான் முக்கிய காரணம்.. 1980 இல் இதற்க்கு அடிகோலியது  விஷ்வ ஹிந்து பரிசத் ,.. ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோஷத்தை திடீர் என்று எழுப்பியது  பரிசத்... பிரச்சினை இதில் என்னவென்றால்  முஸ்லிம்களின்  மசூதி இருக்கும்  இடம் இந்துக்களின்   கடவுள்   ராமரின்  கோயில் இருந்த  இடம் என்று ம்   முஸ்லிம் அரசர் அதை இடித்து விட்டு   மசூதி  கட்டினார் என்றும்  பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.இதற்க்கு  வித்திட்டவர் அன்றைய பாஜக தலைவர் அதவானி .1990 இல் ரத யாத்திரை ஒன்றை இந்தியாவில் நடத்தி இந்துக்களின்  ஆதரவை திரட்டினார்.. பிரச்சினை சிறிது சிறிதாக பெரிதாகி  கடைசியில் பாஜக தலைவர்கள்   தலைமையில் 1992 இல் மசூதி இடிக்கப் பட்டது. இந்தியாவில்   சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட  மிகப் பெரிய மதக் கலவரம் இதுதான். இதில் கிட்ட தட்ட 2000 பேர் இறந்தனர் இதில் கார் சேவக்  என்ற பாஜக வின்  தொண்டர்கள் 1,35,000 பேர் கலந்து கொண்டனர்..அது வரை ஒன்றாய் இருந்த  இந்து முஸ்லிம் மக்களிடையே  பிரிவினைக்கு இது வித்திட்டது.

             இந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக 2002 இல் அயே த்தியாவிற் க்கு சென்று விட்டு சபர்மதி எக்ஸ்பிரேஸ்   ரயிலில் திரும்பி கொண்டிருந்த  கார் சேவக்  குகள் மீது முஸ்லிம்  தீவிரவாத அமைப்பு   தாக்குதல் நடத்தி  தீ வைத்தது. இதில் 58 பேர் மரணம்  அடைந்தனர். இதற்க்கு பதிலடி கொடுக்க குஜராத் முழுவதும் இருந்த இந்து அமைப்புகள்  முஸ்லிம்  மக்களை   படு கொலை செய்தது தான்   மிகப் பெரிய   கொடுமை. 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  இதில் கொல்லப்  பட்டனர். கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த படு கொலை தொடர்ந்து நடந்ததுதான் வேதனை. மாநிலத்தை ஆண்ட  மோடி  தலைமையிலான பாஜக அரசு கண்டும் காணாமல் போனதுதான்   பிரச்சினையின் உச்ச கட்டம்..சமீபத்தில் மோடியின் அமைச்சரவையில் இருந்த  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சருக்கு  (.மாய  கோட்னணி) இரட்டை ஆயுள் தண்டனை  நீதி மன்றம் விதித்தது. இவர் மேற்பார்வையில் 95 பேரை கொலை செய்ததற்கு சாட்சிகள்  வலுவாய் இருந்ததே இவருக்கு தண்டனை கிடைக்க காரணம்..

             இரண்டு கலவரங்களும்  கண்டிக்கப் பட வேண்டிய படு கொலைகளாய்  இருந்தும் 2002 படு கொலை சற்றே  அதிகம் மக்களால்  விமர்சிக்கப்  படுவதற்கு காரணம். முதலமைச்சர்   இதற்க்கு மறைமுக ஆதரவு தந்ததும் , இது வரை இது பற்றி வருத்தம் தெரிவிக்காததுமே   ஆகும்.

Saturday, February 8, 2014

சிறிய முதலீட்டில் முயல் பண்ணை.

முயல் வளர்ப்பு ,. ,  உண்மையில்   குறைந்த   முதலீட்டில் அனைவரும் எளிதில்  செய்யக் கூடிய தொழில் . வீட்டில்  இருந்து கொண்டு  சில்லறை  செலவுக்கு கணவனை எதிர் பார்க்கும் .பெண்கள்  இதை செய்யலாம்.. வேலை
தேடிக் கொண்டிருக்கும்  இளைஞர்களும் தங்கள் தினச் செலவுக்கு அப்பாவின் கையை எதிர் பார்க்காமல்  இருக்க இதை செய்யலாம்..

முதலீடு செய்த 6 மாதங்களில்  இருந்து   உங்களுக்கு  வருமானம் கிடைக்க ஆரம்பித்து விடும். இதற்க்கு தேவையான  முதலீடு முயல் வாங்க சிறிது பணமும் ,முயல்  வைக்க  கூண்டும் இவற்றை  வைக்க சிறிது இடமும் போதும் .இனி  தேவையான  பணம் எவ்வளவு என்று  பார்க்கலாம்.

ஒரு மாத முயல் குட்டி  ஒன்றின் விலை 200 ரூபாய். உங்கள் தொழில்  தொடங்க முதலில் 25 முயல்களுடன் ஆரம்பித்து பாருங்கள்.  25 முயல்களின் விலை  ரூ.5000. இவற்றை வைக்க கூண்டு செய்ய  ஆகும் செலவு ரூ.6000. இது தவிர இவற்றிற்கு வேண்டிய உணவு வைக்க  மற்றும் தண்ணீர் வைக்க சிறு பாத்திரங்கள் வகையில் ரூ.250. ஆக ஒரு சிறு  முயல் பண்ணை வைக்க ஆகும் செலவு அதிக பட்சம்  ரூ 11,250. .வீட்டில்  பின் புறம் இடம் வசதி இருந்தால் கூண்டுக்கு இவ்வளவு செலவு செய்யத் தேவை இல்லை.

இனி இதில்  எப்படி வருமானம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
பெண் முயல் 6 மாதங்களுக்கு பிறகு குட்டி போட தொடங்குகிறது. .குறைந்த  பட்சம் 3 இல் இருந்து  8 குட்டி வரை ஒரு பெண் முயல் குட்டி போடும்..குட்டி போட்ட பெண் முயல் தன குட்டிகளுக்கு  தானே பால் கொடுத்து ஒரு மாதம் வரை வளர்க்கும்..குட்டிகளை வளர்க்க வேண்டிய பிரச்சினை உங்களுக்கு கிடையாது. குட்டி முயல்களை நீங்கள் எளிதில் விற்று  விடலாம்.

 4  பெண் முயல்களுக்கு ஒரு ஆண் முயல் என்ற கணக்கில் முயல் வாங்குங்கள். 25 முயல் என்னும் பொது உங்களிடம்  20 பெண் முயல்களும் 5 ஆண்  முயல்களும் இருக்கும் படி வாங்க  வேண்டி வரும்.. 30 நாட்களுக்கு  ஒரு முறை  பெண் முயலை  ஆன் முயலுடன்  சேர்க்கை விடலாம்
  அனால்  அதை விட 45 தினங்களுக்கு ஒரு முறை விடுத்ல் சிறந்தது.
பிறக்கும்  குட்டிகளின் ஒன்றிரண்டு  இறந்து விட  வாய்ப்புண்டு. எப்படி இருப்பினும் சராசரியாக ஒரு பெண் முயல் மூலம் உங்களுக்கு 4 குட்டிகள் நல்ல  வளர்ச்சியுடன் கிடைக்கும். வாய்ப்பு உண்டு. ஆக 20 பெண் முயல்களின் மூலம் கிடைக்கும்  குட்டிகள் 80. ஆகும். ஒரு குட்டியை ரூ 200 க்கு விற்பதன் மூலம் 80 குட்டிகளை  ரூ. 16.000 வரை விற்கலாம்.

இதில் உங்களுக்கு வளர்ப்பதற்கான  செலவு என்று பார்த்தால் வளர்ந்த முயல் ஒரு நாளைக்கு 250  கிராம் வரை  அதிக பட்சம் உண்ணும் .
மனிதர்கள் உண்ணும்  அனைத்து காரமில்லாத  உணவுகளையும்   முயல்கள் உண்ணும். .நல்ல  ஆரோக்கியமுடன்  வளர்க்க வேண்டும்  என்று என்னும்  நாம் காலையில்  காய்கறி கடைகளில் சொல்லி  வைத்தால்  காலி பிளவர்  தழை  இலவசமாய் வாங்கிக் கொள்ளலாம்.  முட்டை கோஸ்  தழையை விரும்பி சாப்பிடும் .ஆனால்  கழிவுகளில் இருந்து வரும் நாற்றம் அதிகம் இருக்கும் என்பதால் கோஸ்  தழையை முடிந்தவரை தவிர்க்கவும்.. மதியம் 3 மணிக்கு மேல் ஒரு 100 கிராம் கோதுமை தவிடை சிறிது தண்ணீரில்  கலந்து   பாத்திரத்தில் வைத்து  விட்டால் உண்டு விடும். ஒரு கிலோ  கோதுமை தவிடு  ரூ.16 க்கு கடைகளில் கிடைக்கிறது. ஒரு  மாத செலவு ஒரு முயலுக்கு  3 கிலோ , 25  முயல்களுக்கும் சேர்த்து  75 கிலோ ஆகும்.

ஆக மொத்தம் 75 கிலோவிற்கு ரூ.1200  மாத உணவு வகையில் செலவு ஆகும்.
6 மாத  ஆரம்ப கால செலவு  மொத்தம்  ரூ.7200. ஆண்டிற்கு  8 முறை ஒரு பெண் முயல் குட்டி   போடும் . ஆக ஒரு முயல் மூலம் 32 குட்டிகள்..20 (32x 20)இன் மூலம் 640. (ஒரு குட்டி விலை 200). குட்டிகள். 640x 200= 1,29,000.
ஆண்டு வருமானம்  640x 200=1,29,000 .ஆண்டு செலவு  1200x 12=14,400
நிகர லாபம் =1,14,600/12=10,750
இதில் நான் தந்துள்ளது  குறைந்த பட்ச லாபத்தையே . அதிக லாபம்   பெற விரும்புபவர்கள்  ஆண்  முயல்களை  விற்று விட்டு பெண்  முயல்களை   இனவிருத்திக்கு  வைத்துக் கொண்டு அதிகம் சம்பாதிக்கலாம்.. பெரிய முயல்களை  கடைகளில்  கிலோ  ரூ.250 வரை மாமிசத்திற்க்காக எடுத்துக் கொள்கிறார்கள். அதிக பட்சம் 6 மாதத்திற்குள்  2 1/2 கிலோ வரை  ஒரு முயல்  எடை வரும்..
25 முயல்கள் விலை  200 வீதம்  .. ... 5000
கூண்டு செய்ய செலவு .......................6000
                                                                      ------
மொத்த  ஆரம்ப  கால செலவு ........11,000 
                                                                      -------=
மாத செலவு 75 கிலோ  தவிடு ரூ.16 வீதம்....1200x 12=14,400
ஆண்டு வருமானம்
--------------------------
ஒரு முயல் ஆண்டிற் க்கு   32 குட்டிகள் 20 இன் மூலம் =640
ஒரு  குட்டியின்  விலை 200 வீதம் 640 க்கு 200x 640           =1,29,000
மொத்த செலவு  14,400;+அடிப் படை  செலவு 11,250.........=    25,650
                                                                                                                  --------
                                                                                                                   1,03,350
                                                                                                                  ----------
ஒரே ஆண்டில் போட்ட முதலீட்டையும் எடுத்து விட்டு  லாபமும்  சம்பாதிக்க 
சிறந்த முதலீடு  இது என்பதை நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Saturday, February 1, 2014

சாதாரண குடிமனுக்கு ஏமற்றம் தந்த கேஜ்ரிவால்.

             காங்கிரசிற்க்கும்  பாஜாகாவிற்க்கும் மாற்றாக மூன்றாவது அணியால் தர முடியாத   மாற்றத்தை  ஆம் ஆத் மி கட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது அக் கட்சி. ஊழலை ஒழிப்போம், பெண்களுக்கு பாது காப்பு கொடுப்போம், மக்களுக்கு மின் கட்டணத்தை குறைப்போம், தண்ணீரை இலவசமாய் கொடுப்போம்..என்று  வரிசையாய்  வாக்குகள் கொடுத்து விட்டு இன்று என்ன சாதித்தது.??

           ஷீலா திட்சித்  அதிகம்  மின் கட்டணம் வசூலிக்கிறார் என்றவர்கள் ,இன்று மின் கட்டண குறைப்பால் அரசுக்கு 4 மாதத்தில் இழப்பு 200 கோடிதான் என்று சர்வ சாதாரணமாய் கூறுகிறார்கள். . 200 யூனிட் வரை காங்கிரஸ் ஆட்சியில்   1.20  ஏழை மக்களுக்கு தள்ளுபடி  தந்தது .. 2 ரூபாயில் 1.20 தள்ளுபடி என்றால் அப்போதே  50% குறைத்துதானே காங்கிரஸ் ஆட்சி கொடுத்துள்ளது. உங்கள் ஆட்சியில் 200 இல் இருந்து 400 யூனிட் வரை பெற்றவர்களுக்கு மட்டுமே இப்போழுது பலன் அடைந்துள்ளனர்.

         அடுத்து  தண்ணீர் இலவசம். அதிலும் ஒரு லிமிட் கொடுத்து 700 லிட்டர்  என்று வரையரை செய்து விட்டீர்கள். டெல்லியில் 40% வீடுகளுக்கு இன்னும்  சரியான  பைப்  இணைப்போ  மீட்டரோ இல்லை. மீதி உள்ளவர்களில் மேல்தட்டு வர்க்கம்  மற்றும்  கூட்டுக் குடியிருப்பில் இருப்பவர்கள்  நிச்சயம்  700 லிட். மேல் தான் உபயோகிப்பார்கள். அப்படியானால்  உங்கள் இலவச திட்டத்தால் பலன் பெற்றவர்கள்  எத்தனை  சதவீதம் ???

        அடுத்து மிக முக்கியமான  வாக்குறுதி தாமினி  பாலியல் பலாத்காரத்தை உதாரணம் காட்டி எங்கள் ஆட்சியில்   பெண்களுக்கு சிறப்பு பாது காப்பு அமைப்பு  ஏ ற்பாடு செய்து பாதுகாப்பு கொடுப்போம்  என்று.,ஆனால்  எந்த ஒரு பாது காப்பும்  கொடுத்ததாக   இது வரை எடுக்கவில்லை.??
..ஒரு மாதம் கடந்து விட்டது இன்னும்  எத்தனை மாதம் வேண்டும்..

        அன்று எந்த தவறு நடந்தாலும் முதல் மந்திரி பதில் சொல்ல வேண்டும் என்று  போர்க் கொடி தூக்கி விட்டு, இன்று கொலையும், பாலியல் பலாத்காரமும் நடந்தால் அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை.
கங்காரு பஞ்சாயத்தை ஆதரிக்கிறார்,,சட்டத்தை மீறும் அமைச்சரை பாது காக்கிறார், உகண்டா பெண் மீது குற்றம் சுமாத்துகிறார்.எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ,டானிஷ் பெண்  பாலியல் பலாத்காரத்தை பற்றி மூச்சு விடவில்லை. நேற்று  நடந்த அருணாச்சல பிரதேச மாணவன் கொலைக்கு இன்னும்  எந்த ஒரு  நடவடிக்கையோ அறிக்கையோ  கண்டனமோ  இல்லை..

        நாட்டில் உள்ள  அரசியல்வாதிகளை எந்த ஒரு ஆதாரமும் தராமல்  ஊழல்  அரசியல்வாதிகள்  என்று சொல்லிவிட்டு இன்று   சம்பந்தப் பட்டவர்கள்   மான நஷ்ட  வழக்கு போடுவோம் என்ற உடன்  அமைதியாய் இருப்பதும்   ஒரு முதல் மந்திரிக்கு அழகா?? வெறும் விளம்பர அரசியல்  அதிக காலம் ஓடாது. என்பதை என்று உணரப் போகிறார்.??

      7 எம்.பி தொகுதிகள் அடங்கிய  டெல்லி யூனியன் பிரதேசத்திற்க்கு (70 எம் எல் எ) க்களுக்கு 20 கோடி செலவளித்தது டெல்லிக்கு நன்மை செய்யவா? அல்லது இந்திய அரசியலில் காலூன்றி  பிரதமராகும் ஆசையிலா.? 350 எம் பி தொகுதிக்கு நிற்க ஆசைப் படும் கேஜ்ரிவால் இன்னும் எத்தனை கோடி செலவளிக்க தயாராகிறார்..

    இந்த  நிலை தொடர்ந்தால்   அரசியலில்  காமெடி பண்ணும் ஜோக்கர் என்ற பெயர் வாங்க அதிக நாளாகாது. மக்கள் தான் விரைவில் தீர்வு சொல்ல வேண்டும்.