Tuesday, July 23, 2013

தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பும்,சுய மரியாதையும் படும் பாடு.?




பெரியார்  திராவிட  கழகத்தை  ஆரம்பித்தது  மக்களிடையே உள்ள  மூட  நம்பிக்கைகளை ஒழிக்கவும்   சுயமரியாதை  எண்ணங்களை கொண்டு வரவுமே.
ஆனால் இன்று  கழகங்கள் பிரிந்தபின்  கடவுள் பக்தியை பரப்ப கழகங்கள் துணை போகின்றன. ,சுய மரியாதை என்றால் என்ன என்றுதெரியாமல்  சிஷ்யர்கள் இருக்கிறார்கள்... இந்துவை திருடன் என்று கலைஞர் கூறுகிறார் ஆனால் அவர் மகள்களும்,மருமகள்களும்  கோயிலுக்கு சென்று தலைவருக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுகின்றனர்.ஏன் இந்த  நிலை? மக்களை  கடவுளை கும்பிடாதே என்று தடுக்கும்  தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு திராவிட கொள்கைகளை பரப்ப மறந்தது என்??ஊருக்கு மட்டும்தான்   உபதேசமா?. சொந்த வீட்டுக்கு இல்லையா??

        அடுத்து சுய மரியாதை  !! ரூபாய்க்கு என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது  இன்றைய அமைச்சர்களின் செயல்கள்.  உங்கள் தலைவிக்கு,முதல் அமைச்சருக்கு மரியாதை செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால்  பதவியை கொடுத்தார் என்பதற்காக   பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழ வேண்டுமா?? அதை தடுக்காமல் ஆசி வழங்கும் முதல்வர்! இது அதை விட கொடுமை.
             கடவுள் எதிர்ப்பையும்,சுயமரியாதைக் கொள்கைகளையும்  இந்தியாவில்  முதலில் பரப்பிய நம் தமிழகத்திற்க்கு இது தேவையா???     

Tuesday, July 2, 2013

GOD

                                                           கடவுள்
உலகில் பலவிதமான மதங்கள்  பலவிதமான போதனைகள் ,அறிவுறைகள்,கருத்துக்கள்  இருந்தாலும் அனைத்து மதங்களும் சொல்லும் ஒரே வார்த்தை "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் " அவரால் சிருஷ்டிக்கப் பட்டவர்கள் நாம் என்பதுதான்.
இறைவனால் அனுப்பப் பட்ட இறை தூதர்கள்   அல்லது அவதாரங்கள்  இந்த உலகில் அவதரித்து நம்மை ரட்சித்தார்கள்  என்று அனைத்து  மதங்களும்  சொல்கிறது.மனிதனின் இறைவழி பாடு முறைகளிலும், உருவ வழிபாடுகளிலும் தான் மதத்திற்க்கு மதம் வித்தியாசப் படுகிறதே அன்றி  அனைத்து மதங்களும் "ஒன்றே  குலம்  ஒருவனே தேவன்" என் பதில் மாறுபட்ட கருத்து கொண்டிருக்கவில்லை .
கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தான் நாத்திகர்கள் மறுத்து கிண்டல் செய்கிறார்களே அன்றி,   இல்லை என்பதை நிருபிக்க முயற்சி செய்யவில்லை.
நாத்திகவாதி நண்பர்  ஒருவர் வீட்டிற்க்கு மாலையில் வந்தார், எப்போழுதும் போல்  இல்லாத ஒரு கடவுளை பார்க்கப் போகிறிர்ர்களா என்று கேட்டார் .நானும் சிரித்துக் கொண்டே ஆம் என்று சொல்லி விட்டு ,உங்கள் முதுகில் கட்டி  வந்ததாகச் சொன்னீர்களே ஆறி விட்டதா?  பெரிய கட்டியா சிறியதா என்று கேட்டேன் .முதுகில் உள்ளதால் பார்க்க முடியவில்லை,ஆறிக் கொண்டிருக்கின்றது ,வழிதான் தாங்க முடியவில்லை என்றார்.முதுகில் உள்ள கட்டியை பார்க்க முடியவில்லை ஆனால் வலையை உணர்கிறீர்கள்? அதே போல்தான் நான் பக்தியுடன் கடவுளை வேண்டும் போது அவரை காண முடியாவிட்டாலும் அவர் என் அருகில் இருப்பதை  உணர்கிறேன்.என்றேன்.இதுதான் நான் நாத்திகர்களுக்கு சொல்லும் விளக்கம் .
       அடுத்து நாத்திகர்கள் எழுப்பும் பிரச்சினை கடவுளுக்கு சில மதங்களில் உயிர் பலி கொடுப்பதையும்,தன்னைத் தானே பக்தர்கள் வருத்திக் கொள்வதையும் தான்.கடவுள் உயிர் பலி கேட்டதாய்  எந்த மதத்திலும் சொல்லவில்லை .தவறு பக்தனிடம் தானே அன்றி கடவுளிடம் இல்லை.
இதற்க்கு ஒரு கதை உண்டு. முனிவர் ஒருவர் செல்லும் வழியில் குயவன் ஒருவன்  ஆடு ஒன்றை பலி  கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதை கண்டார்.
முனிவர் அவனிடம் ஏனப்பா ஆட்டை இப்படி இழுத்துச் செல்கிறாய் என்று கேட்டார். அவனும் இறைவனுக்கு படையல் செய்தால் தன வியாபாரம் பெருகும் தான்னை கடவுள் நன்கு வைத்துக் கொள்வார் என்றான்.முனிவர் குயவன் கையில் இருந்த பானை ஒன்றை வாங்கி உடைத்தார்.குயவனுக்கு கோபம் வந்து முனிவரிடம் என்னுடைய பானையை நீங்கள் எப்படி உடைக்கலாம். அதை உருவாக்க நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா?என்று கேட்டான்.முனிவர் சிரித்துக் கொண்டே  உயிரற்ற  உன் பானையை உடைத்ததிற் க்கே  நீ இவ்வளவு கோபப் படுகிறாயே ? கடவுள் ஆசையாய் படைத்த உயிருள்ள  ஒரு ஜீவனை  கொல்வதை  விரும்புவாரா என்று கேட்டார்.முனிவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்ட குயவன் ஆட்டை  சுதந்திரமாக செல்ல விட்டு விட்டான் .
தவறை நம்மிடம் வைத்துக் கொண்டு இறைவனை குறை சொல்வதில் பயனில்லை. இன்றைய நம்முடைய வேண்டுதளு க்கு கடவுள்  செவி சாய்க்கவில்லை என்பதற்க்காக கடவுளை குறை சொல்வதை விடுத்து, இதை விட சிறந்த ஒன்றை கடவுள் நமக்கு அளிக்கவிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தால் நம் வாழ்க்கை இனியதாக அமையும்.

Monday, July 1, 2013

GOD

        Whether you are a follower of Christianity or Hinduism or Islamic. All religions preach the same thing. That we are all children of God. We developed different religions and different Gods for ourselves. Atheists always attack the multi-God religions as a weapon to hurt the feelings of theists. It was never intended by God to have so many religions. And because he loved us without any limits he always supported our faith no matter in which form we idolized him.
         Another way that people always misunderstand was sacrifices.God never asked for any sacrifices from his children. Yet people always consider a sacrifice is the best way to reach God.Let me tell you a story of a potter and a Saint. A potter once took a sheep with him. An old saint asked the potter why he was taking the sheep with him. He told the saint that he was going to sacrifice the sheep to God in order for his business to grow and for his well being. The saint then took a pot from the bag of pots that the potter was carrying and he threw the pot on to the ground. The potter got irritated and was furious and he screamed at the saint " You have no right to break what belongs to me!!!". The saint calmly replied " Son, You are getting angry and furious at me for destroying a pot which you created. Then why do you think that God would like you to destroy and kill something that he created out of love and that too for your petty reasons". The potter understood what the saint was trying to tell him. And he let the sheep go free.
       We always misunderstand what God intended for us and then blame God that he did not help us even with all the things that we sacrificed. The mistake is always with us and not with God. They do not understand what God intends.

-Puthiya Manithan.