Wednesday, May 15, 2019

மே. வங்க அரசு மீம்ஸ் போட்ட பெண்ணை கைது செய்ததில் தவறில்லை.

      மே. வங்கத்தில் பேச்சுரிமை இல்லை, எழுத்துரிமை இல்லை இது கடந்த இரண்டு நாட்களாக மீடியா விவாதத்தில்  பரபரப்பாக பேசப் படும்
செய்தி.
     காரணம் மே. வங்க முதல்வர் மம்தாவை கேலிப் பொருளாக ஒரு பெண்  பதிவிட்டது தான். மே. வங்க அரசு கைது செய்தது ,பின் உச்ச நீதிமன்றமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கூற சொல்லி விட்டு, விடுதலையும்
செய்துள்ளது.
    இந்த பெண் செய்தது தவறில்லை என்று மீடியாவும், பாஜகவும் கூக்குரலிடுகின்றன.
    இங்கு நான் கேட்க விரும்புவது  இந்த பெண்மாநிலத்தின் முதல்வரை, 60 வயதிற்க்கு மேற் பட்ட இந்தியாவின் மிக முக்கியமான பெண் மணியை இப்படி  சித்தரிக்கும் முன் முதலில் இந்த உடையில் உன்னையோ அல்லது உன் தாய்,சகோதரி அல்லது உன் பெண் நண்பர்களை இப்படி கேலி செய்திருந்தால் உன்னை இன்று ஆதரிக்கும் கூட்டம்  ஆதரிக்குமா. உதாரணத்திற்க்கு  உனக்கு திருமணம் ஆகி உன் மாமியாரை இப்படி  அசிங்கப் படுத்தியிருந்தால் உன் கணவரோ அல்லது மாமியாரோ பராட்டுவார்களா அல்லது வீட்டை விட்டு விரட்டுவார்களா??

      பெண்கள் சபரிமலைக்கு போவதை எதிர்த்து போராடும் ஒரு கட்சி  ஒரு பெண் தலைவரை கேலி சித்திரமாக காட்டுவதை எப்படி ஆதரிக்கிறது. பெண்களுக்கு கட்டு பாடுகளை விதிக்கும் கட்சி பெண் உரிமையை பற்றி பேச  தகுதி  அற்ற கட்சி.பாஜக.

     நானும் தான் மீம்ஸ் போடுகிறேன், அதற்கென்று எல்லை மீறி  எழுத என்ன உரிமை உள்ளது??.நீ போட்ட மீம்ஸ்  இல் நகைச்சுவை இல்லை உன்னில் இருக்கும்  வக்கிரம்தான் தெரிகிறது.

No comments:

Post a Comment