Thursday, January 30, 2014

மேலை நாட்டு நாகரீகம் நம் கலாச்சாரத்திற்க்கு தேவையா??

தாமினியை வைத்து மீண்டும் பெண்  உரிமை இயக்கங்களும், மீடியாவும் தங்களுக்கு விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. திருமதி ஆஷா சொன்னது என்ன தாமினி  இரவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்றது தவறு. பெண்களின் ஆடையலங்காரங்களும் ஒரு காரணம். இதில் என்ன தவறு. . இங்கே பெண்ணின் கற்ப்பை சூரையாடி இருக்கிறார்கள்.. யார் செய்தது..? காரணம் என்ன??பதில்  குடி போதையில், செய்தவர்களில் முக்கியமானவன் வேறு மாநிலத்தைச் சார்ந்தவன். இரவு நேரத்தில் தகுந்த துணையின்றி வெளியில் சென்றிருக்கின்றாள்.

ஆக தவறு ,செய்தவன் மீது மட்டுமல்ல, தவறு நடக்க அந்தப் பெண்ணும் ஒரு வகையில் காரணம் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள இந்த  அறிவு ஜீவிகள் மறுக்கிறார்கள்.. 2012 ஆம் ஆண்டு  புள்ளி  விவரப்படி  635  பாலியல் குற்றங்கள்  டெல்லியில் நடந்துள்ளது . கிட்டத்தட்ட  2 குற்றங்கள் ஒரு நாளைக்கு  நடந்திருக்கின்ரது . சென்ற ஆண்டு 2013 இல் இது இரட்டிப்பாகி ஒரு நாளைக்கு  4 பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றது  என்று புள்ளி விவரம் சொல்கிறது.  .
சரியான பாதுகாப்பு தராதது காவல்துறையின்  குற்றமாக இருக்கும்  அதே வேளையில்  இவ்வளவு மோசமான ஒரு ஊரில்  ஏன்  தாமினி இரவில்  சினிமாவிற்கு  ஆண் நண்பருடன் சென்றாள். ஏன்  பெண் நண்பர்கள் யாரும் வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்களா? அல்லது மேலை நாட்டு நாகரீகத்தில் வளர்ந்தவளா?

தவறு நடந்து விட்டது அது இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அரசும் பெண்ணை பெற்றவர்களும் சிந்திப்பார்களா? அல்லது  இன்னுமொரு தாமினி  நிகழ்வு நடந்தால்தான் இவர்கள்   விழித்துக் கொள்வார்களா??